நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 09, 2013

நீக்கமற…

நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்ட
பள்ளிப்பருவத்து நண்பன் ஒருவனை
ஆரத் தழுவ முடியவில்லை
நெஞ்சில் நெருடுகிறது ஒரு பல்லுக்காயம்

நண்பரோடு கூடைப்பந்து
ஆடிக் களைக்கலாம் எண்டால்
ஓடி வழியும் வியர்வை
நகங்களின் கூர்மை சொல்லிச் செல்கிறது

சமூக அநீதி கண்டால் கோபம் ?
ஊகும், தள்ளிப் போகிறது
மிருதுவானவற்றோடு சேர்ந்து
நானும் மிருதுவாகிப் போனேன் போலும்.
செங்கொடி மேடைகளில்
உறுத்துப் பேச முடியாதபடி
உதடுகள் கடிபட்டுப் போய் இருக்கின்றன


நண்பர்களுடனான அதீத அரட்டை
ஆடிக்கொண்டிருக்கும் உந்தன் முத்துச்சிமிக்கியை
நினைவுக்கு கொணர்கிறது

சற்றே தாமதமாகும் அலுவலக கூட்டங்கள்
ஆவி பறந்து ஆறிப்போய்க் கொண்டிருக்கும்
ஒரு குவளை தேநீரையும்
இரு குவளைக் கண்களையும்
படம் காட்டுகின்றன

ஆடி அசைகின்ற உந்தன் பின்னல்
ஆக்சிலேற்றரோடு எந்தன் கால்களை - ஒரு
ஆசுவாச உடன்பாட்டிற்கு சம்மதிக்க வைத்திருக்கிறது

எந்தன் பருவத்தில் கொண்ட கோலமெல்லாம்
உந்தன் புருவத்தின் மையில் கரைந்து போகின்றன

அகந்தை அகற்றிய ஆத்மாவை
பரமாத்மா ஆட்கொள்ளல் போல
நான் இழந்த நிற்கும் (எந்தன்) மிச்சத்தை
நீயே முழுதும் ஆட்கொண்டிருக்குறாய்.

அடையாளம் தொலைத்த இந்த நிலையை - எல்லாரும்
அடையாளப்படுத்திக் கேலி சொல்கின்றார்
பின்னூட்டங்-களையும் விருப்பு-களையும்
தாண்டிய ஒரு வாசிப்புக்காகவே
இப்போதெல்லாம் எழுத முயல்கிறேன்

குனிந்த மர நிழலும் குனித்த புருவமும் - கண்ட பிறகு
குதிரைகளின் கனைப்பும்
நரிகளின் ஊளையும் ஒன்றே.

இதற்க்கு முன்னான என்னை
எங்கு தேடினாலும்
நீயே நிறைந்திருக்குறாய் எங்கும்

அந்த பள்ளிக்கூட ஹொக்கி அணியின் நிழல் படத்தில்
பின் வரிசையில் நடுவில் நிற்கும் இளைஞனுக்கும்
எனக்குமான வித்தியாசம் மகிழ்வையே தருகிறது
இதற்க்கு முன்னான என்னை
எங்கு தேடினாலும்
நீயே நிறைந்திருக்குறாய் எங்கும்,
நீக்கமற!

---------------------------------------------------------------------------------
இதை நான் அந்த சம்பவத்து மொன்னமே எழுதினான் எண்டு சொன்னா நம்பவா போறீங்க ?
---------------------------------------------------------------------------------

ஞாயிறு, ஜூன் 24, 2012

ஆனந்தி பகுதி I

Johnians! Always play the game.


காட்சி I: ஒற்றைப் பனை, செம்மணி வீதி 1982.

செம்மணி ரோட்டில் பயணித்துக்கொண்டிருந்த அந்த இரண்டு சைக்கிளும் மோன பாஷையும், மௌன பாஷையும் பேசிக்கொண்டிருந்தன. தூர ஏதாவது சயிக்கிளை கண்டதும், ஒன்று முன்னும் மற்றது பின்னும் என விலகுவதும் பின் நெருங்குவதுமாய் ஒரு நாடகம் ஒத்திகை பார்க்கப்பட்டது - யாரும் அறியாமல். பள்ளங்களில் விழுகிற போது கலகலத்தும் மீள மேடேறும் போது சிணுங்கியும் பரிபாசை பேசின. அந்த ரலி ஆண் சயிக்கில் லுமாலா பெண் சயிக்கிளிடம் அவ்வப்போ நெருங்கவும் லுமாலா அகப்படுவது போல் போக்கு காட்டி சட்டென்று விலகுவதும் எந்த சலிப்பும் இன்றி தொடர்ந்தது. கலகல என சிரித்தால் மாதிரி அதன் பெல் சத்தம் ரலியை மீள மீள வம்புக்கு இழுத்தது. உப்புக் காற்றின் வாசம் ஊர் நெருக்கத்தை உணர்த்தியதும் மெதுவாக அடங்கியது அந்த சலம்பல்.
என்னை ஏன் உனக்குப் பிடிக்கும் ?
பிரேக் கம்பிகளை அழுத்திய வாறே தோள்களைக் குலிக்கிக் கொண்டு சொன்னான்.
பச், தெரியேல்லை பிடிக்கும், அனா நிறைய.
ஊகும் காரணம் சொல்லு ? ஏன் ?
சயிக்கில் இன்னமும் வேகம் குறைந்தது. ஆழ மூச்சு விட்டன், அவளால் சூடு உணர முடிந்தது.
உன் பெயர்தான் காரணம், ஆனந்தி. ஆனந்தி எத்தனை அழகான ரம்மியமான பெயர். எல்லாக் காதலனுக்கும் அவன் காதலியின் பெயர் கவிதைதான் ஆனால் சிலருக்குத்தான் உண்மைப் பெயரே கவிதையாய் இருக்கும்.
அவள் உம் என்று முகத்தை வைத்துக் கொண்டாள்.
இவன் கலகல எனச் சிரித்துக்கொண்டே சொன்னான்.
எனக்கு எங்கட பிரின்சிப்பலைப் பிடிக்கும், அவர் பட்டப் பெயர் ஆனந்தி, அதால அந்தப் பெயரில ஒரு ஈடுபாடு. உன் பெயரும் ஆனந்தியாகப் போனதால் உன்னையும் பிடிக்கும் மேலும் ……….
அவள் முகம் சிவந்து வேட்கினாள், அவன் மேலும் என்று சொன்ன காரணம் அப்படிப் பட்டது.

நூறாவது முறையாக அந்தக் கேள்வி, அதற்க்கு பதில் சொல்லி முடிக்க அவனும் அவளும் பிரிகிற பனை வளவு வந்தது. அது ஒரு கல்லு ரோடு, அவளின் மனத்துடிப்பை புரிந்துகொண்டு லுமாலாவின் கறள் பிடித்த மட்காட் சடசட என சத்தேமேழுப்பியது. அந்த ஒழுங்கை முடுக்கில் ஒரு பனை இதை சட்டை செய்யாமல் தேமே என்று ஓங்கி வளர்ந்து நின்றது.
சில மாதங்களுக்கு முன்னர் …………

காட்சி II: 1982 வடக்கின் பெரும்போர்! யாழ் மத்திய கல்லூரி மைதானம்.



ஏறத்தாள ஒருவருடத்துக்கு முன்னர் எரிந்து அணையாத நூலகம், முனியப்பர், கோட்டை, பண்ணைக்கடல், எல்லாம் வெறித்துப் போய் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் ‘மத்தி’யில் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைந்திருந்த மனிதர்களின் முழுக் கவனத்தையும் உள்வாங்கி அந்த அராவரத்தை விழுங்கி நின்ற இரண்டு இளைஞ்ஞர்களில் ஒருவனைத் தான் கடந்த காட்சியில் சந்தித்தீர்கள்.
சில மணி நேரங்களுக்கு முன்னர்……..

அது ஒரு ஞாயிறு நண்பகல், சில பந்துகளுக்கு முன்னர்தான் பரியோவானின் நபிக்கை நட்ச்சத்திரமான ஒப்பிநிங் பட்ச்மனும் ஆட்டமிழந்து விட்டதால் மத்திய கல்லூரிக்கு வாய்ப்புகள் இன்னமும் பிரகாசமாகி விட்டது. எஞ்சி இருக்கும் பந்து வீச்சாளர்களையும், நம்பத்தக்க கல்லூரியின் டி.எஸ்.பீயும் மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி இறுதி செசனை சமாளிப்பது என்று வீரர்களும் கோச்சும் சில முக்கிய ஆசிரியர்களும், குறிப்பிடத்தக்க பழைய மாணவர்களும் ஆளுக்கொரு அபிப்பிராயத்தை சொல்லிக்கொண்டு இருந்தனர், வீரர்களுக்கான அறை களை இழந்து இருந்தது. எல்லார் முகத்திலும் கேள்விக்குறி. பிக் மேட்ச் மதிய உணவு விசேசம், பல்வகை பறப்பும் நடப்பும் சுட்டும் வறுத்தும் படைத்திருப்பார். இளம் பெடியள் நேற்று கூட மிக ஆர்வமாய் இருந்தனர், இன்று தோல்வி பயம் கவ்விக் கொள்ள உணவுக்கு செல்லும் ஆர்வமுமில்லை. ஏற்கனவே ஆட்டமிழந்து வந்து விட்டவர்கள் குற்ற உணர்ச்சியை அந்த அறையின் அமைதி இன்னமும் அதிகரித்தது. இயலாமையும் தன் மீதான வெறுப்பும் மிக ஒப்பிநிங் பட்ச்மன் பட்டை பல்லை நெருமியவாறு நிலத்தில் குத்திக்கொண்டு இருந்தார்.

வெளியில் ஒருகும்பல் கத்தத் தொடங்கியது "பாசே பசில வடே பரியோவான்…." அதற்க்கு மேல் அவர்களுக்கு கேட்க்க இஷ்டமில்லை.

உதவி தலைமை ஆசிரியர் வந்து நேரம் போகுது சாப்பிட வரச்சொன்னார், சாதரனமாயே கொஞ்சம் குத்தலாப் பேசும் அவர் இன்னமும் ஏதும் சொள்ளமுதல் வேண்டா வெறுப்பா எல்லாரும் சாப்பிட போனார்கள். விரைந்து உணவை முடித்துக் கொண்டு அதிகம் ஆருடனும் பேசாமல் மீண்டும் வீரர் அறைக்கு வந்து விட்டார்கள். அடுத்து ஆட வேண்டிய இருவரும் பாட் அணிந்து தயாராயினர். அப்ப அறைக்குள் நுழைந்த ஆளுமைக்கு பெயர் ஆனந்தராஜா - கண்ணாடி முன்வளுக்கை அமைதியும் ஆழமும் கொண்ட கண்கள். ஆட்களுடன் அறையும் எழுந்து நின்றது. என்ன சொல்லப் போகிறார் எதற்கு இங்கு வந்திருக்குறார்.

come-on guys cheer up…. we can still do it….. some people come to the filed to win, some people come for losing… but we – Johnians! Always play the game..

அறையின் எல்லா சுவர்களிலும் பட்டுத்தெறித்த அந்த வார்த்தைகள் மீண்டும் கூடத்தில் வந்து விழுந்து பரந்தது, எந்த ஒன்று அங்கு இவளவு நேரமும் இல்லாமல் இருந்தததோ அதை யாரோ குடம் குடமாய் கொணர்ந்து கொட்டினாற்ப் போல் இருந்தது. அடுத்து ஆடத்தயாரான வீரர்களில் ஒருவரான கல்லூரியின் டிஎஸ்பி கைகளை நீட்டி உரத்து சொன்னான் “Johnians! Always play the game.” அதிபர் ஆனந்தராஜா அதை பற்றிக் கொள்கிறார். அணித்தலைவர் மற்றைய வீரர்கள், குறை சொல்லும் உதவி அதிபர், பயிற்றுவிப்பாளர் எல்லாரும் ஒருங்கே கைகளை இணைத்து சேர்ந்து கோஷமிட்டனர் - Johnians! Always play the game. அந்த அறை மீண்டும் உயிர் பெற்றது…. வெளியில் இப்போ இன்னொரு கும்பல் பாடத் தொடங்கியது, மைதானத்திற்கு வர இருக்கும் துடுப்பாட்ட வீரர்களை வரவீர்க்கும் முகமாக – We will… We will… ROCK U!. தும்தும்தும் தகர ட்ரம் அதிர்ந்தது, மீண்டும் We will… We will… ROCK U!. தும்தும்தும்.

துடுப்பாட்ட வீரர்கள் கைகளை சுழற்றிக் கொண்டு களம் காணத் தயாராகுகிறார்கள், டிஎஸ்பியை அணுகிய அதிபர் அவன் தோள்களைத் தட்டி சொன்னார் – it is your day தம்பி, remember Johnians! Always play the game.

இவ்வளவு நேரமுமிருந்த குழப்பம் நீங்கி கண்களில் தீர்க்கமும் ஒளியும் தெரிய அவன் தலையை ஆமோதித்து அசைத்து சொன்னன் Johnians! Always play the game………..வசனம் முடிக்க முதல் அதிபர் திரும்பி மேல் மாடிக்கு நகர்கிறார்…. இவன் ஆனந்தி என்று காதலுடன் வாய் மொழிய வேம்படி கல்லூரி மாணவிகள் கூஊஊஊ…. என்று கத்த, பதிலுக்கு சுண்டுக்குளி மாணவிகள் இவன் பெயரை ஆர்ப்பரிக்க, வாய் ஆனந்தி என்று முணுமுணுத்ததை யாரும் கவனியாது விட…. வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப் படும், நூற்றாண்டு பழைய பரியோவான் கல்லூரி மத்திய கல்லூரிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின், 1982ம் ஆண்டிற்கான வருடாந்த துடுப்பாட்டப் போட்டியின் (cricket) இறுதி கட்டம் ஆரம்பமானது.


ஏறத்தாள ஒருவருடத்துக்கு முன்னர் எரிந்து அணையாத நூலகம், முனியப்பர், கோட்டை, பண்ணைக்கடல், எல்லாம் வெறித்துப் போய் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் ‘மத்தி’யில் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைந்திருந்த மனிதர்களின் முழுக் கவனத்தையும் உள்வாங்கி அந்த அராவரத்தை விழுங்கி நின்றனர் அந்த இருவரும்.

தொடரும்…….


Johnians என்பது பரியோவான் கல்லூரி மாணவர்களை குறிக்கும், பரியோவான் கல்லூரி கீதத்திலே இந்த வரிகள் வருகின்றன
Your Alma Mater's ancient name,. Johnians !Always play the game
உசாத்துணை:

சனி, மே 05, 2012

எங்கே எனது கவிதை?

எங்கே எனது கவிதை? "இரும்புகுதிரை"

மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியிலிருந்து வரும் ஓசை ஆரம்பத்தில் நிறைய எரிச்சலை தந்தது. இப்போ பழகி, அதைக் கேட்டாலே நித்திரை சொக்குமளவுக்கு ஆகிப்போனது. ஆனால் இன்றைக்கு அது மனதில் மையம் கொண்டிருந்த பெரும் எண்ணச் சுழலுக்கு ஒத்திசைத்தாற் போல் இருந்தது. நாளை கல்கிசைப் போலீசிடம் சென்று பிறந்த கதை வளர்ந்த கதை எல்லாம் சொல்ல வேணும் - கொழும்பு வரும் போது போட்டிருந்த அண்டர்வியார் நிறம் வரை கேப்பானுகள். சிங்களத்தில் விறுவிறு என்று ஏதோ எழுதுவானுகள். நான் சொல்வதைத்தான் எழுதுரானா என்று தெரியாது.


அந்தக் கட்டிலுக்கு மரக்கால் இரண்டு, மற்றயவை செங்கல் மற்றும் உடைந்த ஒரு பிளாஸ்டிக் வாளி கொண்டு இட்டுக்கட்டியது. எனக்கு அடுத்து திரும்பி படுத்திருப்பவன் இரண்டாவது தம்பி - உமா. அங்கால கீழ படுத்திருப்பவன் முதல் தம்பி - கோபி. அவனிலிருந்து சில அடி தூரத்தில் பெரிய பாக்குகள் சூட்கேசுகள் பிறகு படி கீழே செல்லும். ஒரு மூன்றுக்கு மூன்று அடி பாத்துரூம் கீழே, பாசியும் உடைப்பும் வெடிப்புமாய். பிளஷ் செரியா வேலை செய்யாத கோமேட்.

மாசம் இரேண்டாயிரத்தில் மூன்று பேரும் சாப்பிட வேண்டும், வாடகை + கரண்ட் பில் + வாட்டர் பில் எல்லாம் சேர்த்து அப்பா கட்டி விடுவார். இரண்டாயிரத்தில் கொழும்பில் மூன்று பேர் - கருப்பன் அரிசி, கஞ்சி, தேங்காய் சொட்டு, சின்ன றால் பொரித்து, பொரித்த கச்சான் சேர்த்த யெல்லோ ரைஸ் கனவுகள் காண்பதை தவிர்த்து சில மாசங்கள் இருக்கும்.

காற்றில் கரைவது
கனவா விதையா ?
உமா வந்து ஒரு மாசமிருக்கும், வவுனியாக் காம்புக்கால தப்பி பிழைச்சு வந்தான். முன்னோர் புண்ணியத்தில் அப்பா டாக்குத்தர், பிள்ளையாருக்கு வைத்த நேர்த்தி சென்ற்றியில நிண்டவனுக்கு காது நோவா வர - தப்பி பிழைச்ச கதை ஒரு திரில்லர் படம். படம் எண்டதும் நான் எழுதி முடிக்காத படம் நினைவில் வந்தது, மேசையில் அந்த கொப்பி பாதி திரைக்கதை சில பாடல்களுடன் ஃபான் காத்தில் துடிச்சுக் கொண்டிருந்தது. அந்தக் கொப்பிகள் தொலைந்து மயிலிறகாய் என்னுடைய கனவுகள் கனக்க பத்திரமாய் , சட்டென்று இந்த மாசத்திற்க்கான காசுப்பிரச்சனை வந்து சிந்தனையை வெட்டி வயிற்றை பிசைந்தது.

போன கிழமை உமாவிட்ட நூறு ருபாய் சாப்பாடுக்கு குடுத்திருந்தன், அவன் சந்தோசமா கொத்து ரொட்டியும், கோக்கும், கோழிக் குழம்பும் சாப்பிட்டு விட்டு எங்களுக்கும் அப்பம் வாங்கிக்கொண்டு வந்தான், அது ஒரு கிழமைக்கான (ஒரு வாரம்) காசு ஒரே நாளில் முடிச்சிருந்தான். இப்பதானே வந்திருக்குறான், அவனுக்கு சிக்கலை செரியா சொல்லேல்லை. கீழே படுத்து குளிரும் மழைத் தண்ணியும் போய் கோபிக்கு காது நோ. அதுக்கும் ஒரு வழி பண்ண வேணும்.

கொப்பியின் மட்டையும், இரண்டு பக்கங்களையும் காத்து திருப்பி மூன்றாவது பக்கத்தோடு சில்மிஷம் பண்ணிக் கொண்டிருந்தது.

நேற்றுத்தான் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மாண்ட கடிதம் வந்தது. உதயாவும் ஒரு கடிதம் எழுதி இருந்தான். கடைசி தம்பி - தனியே அங்க அம்மா அம்மாமாவுடன், எப்படி சமாளிக்குரானோ. கரண்டில்லை, எண்ணை இல்லை, கடைகளுமில்லை எப்படி ?, அப்பவாவது கடைகள் இருந்திச்சி - கொஞ்சம் பரவாயில்லை, இப்ப ஆமிக்காறனுகள் - எதையும் கடிதத்தில எழுதேல்லை.

நேற்று கூட பஸ்ஸில் போகேக்க ஒரு நல்ல கவிதை வந்தது, எழுதி வைக்க நேரமில்லை இப்ப மறந்துட்டுது. முந்தி ஏ.எல் எக்சாமை கிண்டி கவிதை எழுதிக்கொண்டு இருந்தன், பயோ படித்தன், டாக்குத்தர் ஆவன் எண்டு சுற்றம் சொல்லிற்று, கெமிஸ்ட்ரி பிடிச்சுது, பயோ சயன்ஸ் டிகிரி முடிச்சு, இப்ப கொழும்பில, அடுத்து ? ஊருக்கு கடிதம் எழுதோணும், நூறு ரூபாய மனேஜ் பண்ணோணும். புத்தி பர பர எண்டது காது நோவுக்கும், காசுக்கும் - எதுகை, ஊருக்கு கடிதம் - மோனை கண்டது.

ஊருக்கு கடிதம் மட்டும் காணாது, தனியே, இன்னமும் இடம்பெயர்ந்த சுற்றம் வந்து சேராமல், எந்த பராக்கும் இல்லாமல் - ஆ ஒரு ரேடியோ சின்னது பற்றியோடு வாங்கி அனுப்பினால் பொழுது போகும், செய்தி கேக்கலாம். கட்டாயம் வேணும். பெட்டாவில கொஞ்சம் மலிவா சின்னது ஒண்டு கிடைக்கும் எஸ்.டபிள்யு வோட வாங்கினா பி.பி.சி கேக்கலாம். கொழும்பில் ஒரு கிழமைக்கு மூண்டு பேர் எவ்வளவு குறைவான காசில சீவிக்கலாம் ? பருப்பு மட்டும் கடையில வேண்டி பாணை தனிய வாங்கினா கொஞ்சம் மிஞ்சும், இந்த சூட் கேசை யன்னல் பக்கம் வைச்சு கொஞ்சம் வெள்ளம் குறைக்க பாக்கலாம், அப்பத்தான் கீழ படுக்கலாம். மழை பெரிசா அடிக்காட்டி பெட்டர். மூளை மனது உடம்பு சேர்ந்து ஒரு தீ பர பர எண்டு எழுந்தது. காத்து கதைக் கொப்பியை பிரட்டி கீழ விழுத்தியது.

கொப்பியை எடுத்து வைச்சுட்டு பார்த்தா சண்டே லீடரில கொம்புயுடர் வேலைக்கு விளம்பரம் வந்திருந்தது. காலைச் சூரியனின் செம்மையை எதோ பெயர் தேரியாத பறவை தகவல் சொன்னது. ஒரு போருக்கு நான் தயார் ஆனேன், கதையும் கவிதையும் மறந்தே போனது. காற்று மட்டும் இன்னமும் அந்த எழுதி முடிக்காத படக்கதைக் கொப்பியோடு சீண்டிக் கொண்டிருந்தது.

பி.கு: இரும்புகுதிரை என்பது பாலகுமாரன் எழுதிய ஒரு அற்புதமான நாவல், அதை வாசித்தவர்களுக்கு அதை இங்கே Caption ஆ பாவித்ததன் பொருள் விளங்கும்.

வெள்ளி, மே 04, 2012

ஒரு போராளியின் கதை - II: தேரை நினைவு

முந்தய பாகம்
ஒரு போராளியின் கதை: பகுதி இரண்டு -தேரை நினைவு.




ஊருக்குப் போய்ப் பார்த்தா உற்றாரில் சிலரில்லை
வீட்டுக்கு போய்ப் பார்த்தா உத்தரத்தில் மீதியில்லை
பேருக்கு கூட கோயில் கோபுரத்தில் மிச்சமில்லை
ஆட்டுக்கு மட்டும் கொம்பென்னும் இளைக்கவில்லை


உற்றாரில்லாட்டியும் உறவென்னும் மிச்சமிருக்கு
உத்தரமில்லாட்டியும் நாய்க்கென்னும் சோறிருக்கு
கோபுரம் இல்லாட்டியும் குயில மணி ஓயவில்லை
கொம்பு இளைக்காத்தால வீம்பென்னும் போகவில்லை






காடு மேடு போன கால்கள் கன்னியை தேடுது
நித்திரை மறந்த கண்கள் அவள் சித்திரத்தை தேடுது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது - அவள்
நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது


அவள் நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது.


நினைவில் பூத்த பூ

தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ? - இல்லை
போர் மேகம் வந்ததனால் தொலைவுக்குப் போனாளோ?
நாகை கருங்கூந்தல் நரையோடி இருக்குமோ?
கார்மேகம் என (என்னை) இன்னும் எண்ணி இருப்பாளோ?


தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ?
கார்மேகம் என என்னை எண்ணி இருப்பாளோ?


பிள்ளைப் பராயம் கல்வியோடு போகவில்லை
விடலைப் பருவம் விரும்பியபடி அமையவில்லை
காளைப் பருவமது கடும் யுத்தம் புரிந்தபடி
கடைசிப் பருவம் அவள் கனவுகளில் கழியட்டும்.




தாய் மண்ணை தனயர் நாம் சுமந்திட்ட வரலாறு
பத்து மாதமல்ல பயிற்ரிரண்டு வருடங்களாய்: கரு வயிற்றில் - அந்தப்
புந்தி உடைத்து புகழ் கொண்டார் உலகமெல்லாம் - அந்தப்
பந்திக்குப் போகமால் குளவி செய்வீரோ அக்குருதி ?


பாரெல்லாம் பரந்தவனே - இந்தப்
போராளியின் கதை கேட்டாயா ?
கார் மேக வண்ணா - இனி
போராடா வருவாயா ?


கார் மேக வண்ணா - 
இனிப்போர் ஆட, வருவாயா ?

இனிப் போராடலாம்......


அடுத்த பாகத்தில் போராடலாம் இனி.

ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

தனியே எமக்கோர் குணமுண்டு.... முகவுரை

முகவுரை




இது ஒரு சிறுவன் சொன்ன கதை. நீலக் காற்சட்டையும் வெள்ளை சட்டையும், அதில் செவ்வகமாய் பாடசாலை சின்னமுமாய் - ஒரு துடிப்பான சிறுவன். கதை கேட்டவனும் அப்படியே அவனும் ஒரு சிறுவன் தான். இந்தக் கதையில் அந்த இருவருமே முக்கிய பாத்திரங்களே. என் வழமையான 'கதைகளில்' இருந்து வேறுபட்டு இது உண்மை சம்பவங்களின் அடிப்படையிலானது. கதையில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் யாரையோ குறிப்பிடுவனவையே.

இந்த Spartan 300 படம் பார்த்திருப்பீர்களே... இல்லாட்டிக் கூட பரவாயில்லை இந்தக் கதை கேளுங்கள், அது மாதிரி ஒரு கூட்டம் தீரர்களின் கதை.

அந்தக் கல்லூரியை ;சேர்ந்தவர்களை இந்து-காளைகள் (hindu-bulls) என்றே அழைப்பது பொருத்தம், அவர்கள் கல்லூரி சின்னத்தை முன்னிட்டு மட்டும் நான் அப்படி சொல்லவில்லை. அவர்களின் இயல்புப் பொருத்தமும் சேர்த்துதான்.

அதில் இளையவனாகத் தெரிந்த சிறுவனுக்கு அப்படிச் சொல்வதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை; கொஞ்சம் மமதை, நிறையப் பெருமை! அடக்கமாகச் சொல்வது போல் ஆர்ப்பாட்டமாக சொல்வதில் வல்லவன் அவன். அவன் மட்டுமா அந்தக் கூட்டமே அப்படித்தான்.

அதை ஆமோதித்த சிறுவன் இவனை விட கொஞ்சம் பெரியவன் என்பது என் ஊகம், மற்ற சிறுவனின் தொனியைப் பார்த்தால் அப்படித்தான் தெரிந்தது. இத்தனை சிறிய நிகங்கள் கொண்ட விரல்களை இந்த சிறுவனைத் தவிர வேறு யாரிடமும் பார்த்ததில்லை. அந்த சிறுவனுக்கு நகங்கள் மீது ஏன் இத்தனை கோபமோ - ஒரு வேளை தாள வாத்தியக்காரனோ இல்லை தந்தி வாத்தியக்காரனோ - அப்படித்தான் மற்ற சிறுவன் ஏதோ சொன்னானே - என்ன அது - ஆ... ட்ரவுசர் போட்ட புல்லாங்குழல்....

கதை சொல்லும் பெரியவன் ஆறாம் வகுப்பு கேட்க்கும் சின்னவனுக்கு பத்தாம் வகுப்பு - என்னது குழப்பமா இருக்கா அது அப்படித்தான். கதை சொல்லும் பெரிய சிறுவன் ஒரு கணணி மென் பொறியியல் வலுனன். இலங்கையின் தலை சிறந்த மென்பொருள் வடிவமைப்பு கம்பனியில் கூப்பிட்டு வேலைக்கமர்த்தப்பட்ட ஒரு வித்தைக்காரன் (நன்றி பிரேம்நாத் சார்). மொரட்டுவப் பல்கலைக்கழக இலத்திரனியல் பொறியியல் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த ஒரே தமிழர். இந்த ஏங்க ஊரு பாட்டுக்காரன் பெயர் தயாபரன். கதை சொல்கிற போது ஒரு ஆறாம் வகுப்பு சிறுவனாகத்தான் சொன்னார் - கேக்கிறவன் ஒரு பத்தாம் வகுப்பு பெடியனாகத்தன் கேட்டான். அந்த இரவு முழுவதும் நினைவு மழை......(சக்திவேல் வார்த்தைகள் படி) நினைவிடை தோய்தல்....


கதை கேட்பவனே கதை சொல்லியும் ஆவான்.......

இந்த முகவுரைக்கும் கதைக்கும் இம்மியளவும் சம்பந்தம் இல்லை, ஆனா இதுதான் கதை ஜனித்த புள்ளி. இந்தக் கதையில் வரும் சித்தரிப்புகளுக்கும் வார்த்தைகளுக்கும் முழுமையான் சொந்தக்காரர் தயா அண்ணா தான். இதில் வரும் சம்பவங்களும் மனிதர்களும் எங்கள் கதாநாயகர்கள், பெருமையும் சிறப்புமாய் அவர்கள் கட்டிய கோட்டையில் தான் நாங்கள் கொடியலங்காரம் செய்தோம். சொன்னவர்களைக் காட்டிலும் சொல்லியதைக் காட்டிலும் நிறையக் கதைகள் இருக்கு. ஒரு இரவில் சில மணித்துளிகளில் கனவு மாதிரி கடந்த பசுமை நினைவுகளில் வேள்ளெனத் தெரிந்த புள்ளிகளை கோர்த்து கோலமிடுகிறேன்...

உங்கள் வாழ்த்துக்கள் பெரியவனுக்கும் வருத்தங்கள் சின்னவனுக்குமாய் இருக்கட்டும்.

தனியே எமக்கோர் குணமுண்டு....

முகவுரை


காட்டிடை கற்பகதரு.....

அது 1992, ஜூன் அல்லது ஜூலை என்று நினைகிறேன்.... பம்பலப்பிட்டி பிளட் பஸ் தரிப்பை ஆதிசேசன் படம் விரித்தது போல் நிழல் போர்த்து காத்து நிற்கும் மரங்களை வெப்பக் காற்று உலுக்கி எடுத்துக்கொண்டு இருந்தது. என்னத்தைப்பற்றி காற்று மரங்களிடம் விசாரித்து இருக்கும்.... சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கோரத்தையா, இல்லை சற்று நேரத்தில் கதிரேசன் மண்டபத்தில் நிகழ இருக்கும் பிரமிப்பையா....

பம்பலப்பிட்டி பிளட்ஸ் பஸ் தரிப்பிடம்
கோவிலுக்கு கூட இவ்வளவு கூடியதில்லையே, கடைசியா ஆடிவேலுக்குதான் இதனை வேலைப் பளு இருந்தது, அப்படி ஒரு பள்ளிகூட விழாவிற்கு எதற்கு இதனை 'தலை'கள். அந்த சிங்களப் போலீஸ்காரருக்கு அயர்ச்சியும் அதிசயிப்பும் சேர்ந்து அதிர்ச்சி கூட. ஆண்கள் பாடசாலை எண்டுதானே சொன்னார்கள் எதற்கு இத்தனை பெண்கள். half saree அணிந்த வளையல் கரங்கள் அலைமோதியது அவருக்கு அதிர்ச்சியே. போலிஸ் பயிற்சியில் விடியக்காலையே எழுந்து வெறு வயிற்றோடு மைதானத்தில் சுமார் ஐந்தாறு சுற்றுகளை அரை மணி நேரத்துக்குள் ஓடத் தெரிந்த, விறைப்போடு சலூட் அடிக்க தெரிந்த, கள்ளனை கண்களால் அளவெடுக்க தெரிந்த அந்த நடுத்தர வயது போலீசுக்கு இந்த வளையல் கரங்கள் யாராக இருக்கும் எதுக்கு அலை மோதுகிறார்கள் எண்டு கண்டுபிடிக்க தெரியவில்லை.

அன்று சபையில் ஒரு அற்புதம் நிகழ்த்த இருக்கும் இளஞ்ஞனின் காதலிகளும் காதலிகள் ஆகப்போகிறவர்களுமே ஒரு கூட்டம் இருக்குமே. மற்றவர்களையும் சேர்த்தால். காக்கிக்கு இது புரிய வாய்ப்பில்லை.


மாலைக் கடைக்காரர்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது, குறிப்பாய் மல்லிகை சரம். மொட்டு மாலை விலை அதிகம் ஆனாலும் கிராக்கி இருந்தது. விரைவில் மல்லிகை விற்றுத் தீர்ந்ததால் மற்றைய பூச்சரங்களை வகை வகையாய் கோர்த்து வைத்தார்கள். கனகாம்பரம் கையிருப்பில் இல்லை, ஆனால் பலர் குறிப்பாக நடுத்தர வயதுப் பெண்கள் அதை இருக்கா இருக்கா எண்டு ஆவலோடு கேட்டு ஏமாந்து போனார்கள்.

பூக்கடைக் காரர்களுக்கு மட்டுமல்ல அந்த பலசரக்கு கடையிலும் நல்ல கூட்டம், பாக்கட்டில் வரும் தீன்பண்டங்கள், பிஸ்கட்கள், டொபிகள், மென்பானங்கள், கண்டோஸ் மற்றும் பெப்பர்-மின்ட்கள் விரைந்து விற்பனை ஆனது. பெரிய அளவில் இலாபம் தராத பண்டங்களே ஆயினும் நிறைந்து விற்றதில் முதலாளி மகிழ்வாயிருந்தார். ஆனாலும் கடைப் பையன்களிடம் கண்டிப்பாயே இருந்தார்.

வழக்கத்துக்கு மாறாய் நிறைந்த கூட்டம் தங்களுக்கு பலனளிக்காததில் பிச்சைக்காரர்கள் கூட்டம் நிறைய ஏமாற்றம் கொண்டது. கோவில் திருவிழாக் கூட்டம் அல்லது சமய விழாக் கூட்டம் என்றால் தங்களை வலுவாகக் கவனிக்கும். இந்தியாவிலிருந்து யாரும் பிரபலங்கள் வந்திருந்தால் தான் இப்படிக் கூட்டம் அலை மோதும் ஆனாக் கவனியாது. இது புதுசு, உள்ளூர் விழாதான் ஆனா இவ்ளவு ஆர்ப்பாட்டம். போன கிழமை கூட ஒரு உள்ளூர் பிரபலம் - டிவி எல்லாம் தெரிந்த முகம் ஒரு விழா நடத்த்தினாரே, ஆனா கூட்டம் இல்லையே. குறிப்பா இளைஞ்ஞர் கூட்டம் இந்த இடத்திற்கு புதுசு. கோவிலும், சினிமா இல்லாத பண்பாட்டு விழாக்களும் இளசுகளை அவளவாய் ஈர்த்ததில்லை.

வித்தக விநாயகர்
ஏன் இவ்வளவு கூட்டம்? ஒருவேளை இந்தக் கல்லூரியின் அமைப்பு:- நீலம், சிவப்பு, பச்சை எண்டு வகை வகையான டை அணிந்த பெண்கள் பாடசாலைகள் சுற்றி இருக்க என்பதாலோ.... ஒருவேளை அதைத் தான் தலைநகரின் மையப்பகுதியில் இருக்கும் தன்னிகரில்லாப் பாடசாலை எண்டு சொல்லுரானுகளோ?.... யாருக்கு தெரியும்வித்தக-விநாயகருக்கேவெளிச்சம்.

வாசலில் இருந்த பரபரப்பு உள்ளே பாதையில் தெரியவில்லை. அகன்றிருந்த பாதையும், அங்கால் பக்கம் இருந்த மண்டப வாசலும் உள்ளே நடக்கிற பரபரப்பை பெரிதுபடுத்தியது - ஒரு திரில் அனுபவமாய் - suspense effect இல்.

திறந்து விட்டிருந்த கிறில் கேட்டுக்கு இடையில் ஒரு மேசை, இரண்டு குத்து விளக்கு, நடுவே ஒரு கும்பம், சில வேட்டி கட்டின தலைகள் தெரிந்தன. ஒருவன் குத்து விளக்கை காற்றிடம் இருந்து காப்பற்ற கங்கணம் கட்டிக் கொண்டு போராடிக் கொண்டிருந்தான்.

இந்த ஆர்ப்பாட்டங்ககளுக்கு மத்தியில், அதை கண்டு கொள்ளாதவர் போல் எங்கட கதையின் நாயகன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தார். பள்ளி உடுப்புத்தான், நல்லா கஞ்சி போட்டு தோச்சு அயன் பண்ணின மிடுக்கான சட்டை; கையில் ஒரு பையில் வேட்டி குருத்தா எண்டு நினைக்குறேன். பாடலில் லயித்திருந்தவர் நேற்று பயிற்சியில் சொன்ன மாதிரி ஒரு குறித்த வரியைப் பாட முயன்று கொண்டிருந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக பயின்ற சிறுவர்களும், பயிற்றுவித்த ஆசிரியர்களும், கூட்டி வந்த பெற்றாருமாய், எல்லோருமே வறுத்தெடுக்கப் பட்டார்கள். தொடர்ச்சியான கடும் பயிற்சி + ஒத்திகை. ஆனா இந்த நாடக் காரங்கள் பயிலும் போது தங்களை மாதிரி நண்டு சிண்டுகளை துரத்தி விட்டுடுவானுகள் என்பதுதான் அவனின் ஒரே வருத்தம். அதிலும் தமிழழகன் உருவமும் குரலும் அவர் பேசமுதலே பயம் பற்றிக் கொள்ளும். தெறித்து ஓடிவிடுவானுகள். சுபாஸ் பற்றி கண்டதை விட கதைகள் அதிகம் என்பதால் ஒரு முடிவற்ற குழப்பம் அவர் பற்றிய அபிப்பிராயத்தில் இருந்தது. எது எப்படியோ இண்டைக்கு அந்த நாடகத்தை பார்த்து விடலாம். எதோ ஒரு அரச நாடகம் என்பதை தாண்டி வேறேதும் தெரியாது, ஆர்வம் மனதை அரிக்கத் தொடங்கியது....

இவன் சுதர்சனை இன்னும் காணவில்லையே, எங்கயாவது மூலைக்க நிண்டு சுரம் பாடிப் பார்கிறானா - பாவி என்ன குரல் அவனுக்கு. உள்ளுக்குள் இருந்து ஒரு வெள்ளை நிற வான் வேகமாக கடந்து போனதில் சிந்தனை வேறு தளத்திற்கு தாவியது. அண்டைக்கு அப்படித்தான் ஒரு லே-லான்ட் பஸ் பிடிச்சு தமிழ்தினப் போட்டி போனது நினைவு வந்தது - கூடவே பூரிப்பும் பெருமையும்.

ஏறு போல் நடை

சுபாஷ் அண்ணா:
உதவி சிரேஷ்டமாணவ தலைவர் 93-94
தமிழ் அண்ணா:
சிரேஷ்டமாணவ தலைவர் 92-93
தமிழ்த் தினப்போட்டியில் மாவட்ட, மாகாண ஏன் அகில இலங்கையளவில் எங்களுக்கு எத்தனை பொற் பதக்கங்கள். மாவட்ட மட்டப் போட்டிக்கு போன போதுதான் பஸ் பிடிச்சு போனது. வழமையாக கடுமையாக இருக்கும் தமிழ் மற்றும் சுபாஸ் அண்ணாமார் சிரிச்சுக் கும்மாளம் அடிச்சுக் கொண்டு கூட்டிக்கொண்டு போனது ஒரு இன்ப அதிர்ச்சி. சிரேஷ்ட மற்றும் பிரபல்யமான (அடுத்த வருடம் உதவி சிரேஷ்ட மாணவதலைவர் ஆகப் போகிற) மாணவ தலைவர் என்பதாலேயே அவர்கள் மீது ஒரு பயம் கலந்த மரியாதை. முகுந்தன், லோசன் எண்டு ரெண்டு அண்ணாமார் - அவர்களிலும் சின்ன அனால் இவனிலும் பெரிய பெடியனுகள் தமிழோடும் சுபாஸோடும் நல்ல ஓட்டப் பேசிப் பழகினானுகள். விவாத அணிக்காரனுகள். சுபாசண்ணாவின் ஒரு காதல் கவிதையை லோசனும்முகுந்தனும் - தமிழுக்குகிண்டலும் கேலியுமாய் சொல்லிக்கொண்டு வந்தது ஆச்சரியமாயும் உற்சாகமாயும் இருந்தது. வயது வேறுபாடின்றி அவனுகள் சிரேஷ்டமாணவதலைவர்களையே கிண்டலடிப்பது இந்த ஆறாம் வகுப்பு சிறுவனுக்கு புதிதே. அவனுகள் எல்லாம் எதோ ஒரு பெருமையும் தினவையும் அந்த சிறுவனுக்குள் அவனுக்கு அறியாமலேயே ஊடிக்கொண்டிருந்தானுகள். (இவர்களைப்பற்றி இன்னும் விவரமாய் வருகிற தொடர்களில் பதிய இருப்பதால் இப்போ தவிர்த்து விடுகிறேன்)

பஸ் பிடிச்சுப் போனவனுகள் வரேக்க ஒரு ஒட்டோவும் பிடிக்க வேண்டி இருந்தது - பெற்ற பரிசுகளை பாராட்டுகளை அள்ளி வர. தமிழ்அழகனின் நாடகம் முதற் பரிசு பெற்றதோடு, பின்னர் மாகாண மற்றும் அகில இலங்கை மட்டம் வரை சென்று வெற்றி பெற்றது. மேலும் நடுவர்களின் பரிந்துரையின் பேரில் தமிழ் தின பரிசளிப்பு விழாவில் அரங்கும் ஏறியது. நாடகம் மட்டுமல்ல. கீழ் பிரிவு மேல் பிரிவு குழு தனிப் பாடல்கள் பேச்சு கவிதை கட்டுரை இன்னும் இன்னாவோ எல்லாம் - முதல் பரிசு புதல பரிசு முதல் பரிசு....

பரிசுகளை அறிவிப்பவர் முதலே எல்லா முதல் பரிசும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கே எண்டு சொல்லிருக்கலாம் போல.... அப்படி தொடர்ச்சியாக இந்துக்கலூரி முதலிடம் , இந்துக்கலூரியை சேர்ந்த இவர் முதலிடம் ...சொல்ல அவருக்கு அலுத்ததோ இல்லையோ கேட்ட எங்களுக்கு தித்திப்பு... மற்றவர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, அதிலும் சில பொறாமைக்காரர்கள் முகத்தில் ஒரு கலியாணத்திற்கு தாளிக்குமளவுக்கு கடுகு வெடித்தது எண்டால் பாருங்களேன். யார் கண்ணுக்கும் படாமல் சில காதல்களும் வெடித்தது.

"ஊ..." என்ற கத்தல்களும், சீண்டலும், குறிப்பாய் பெண்கள் கல்லூரிகளைப் பார்த்து கலர்ஸ் காட்டுறதும், அலம்பல், சிலம்பல், ஆர்ப்பாட்டம், பெருமை, வீறு, ஆனந்தம் எல்லாம். தரையில் கால்கள் நிற்கவில்லை. தங்கள் குழுவிற்கு பரிசு கிடைத்தது எண்டு தெரிந்ததும் கைதட்டி ஆரவாரப் படுத்தி கை குலுக்கி - சந்தோசம் + வெக்கம். நாம ஹீரோ நிஜமாயே ஹீரோவாய் உணர்ந்தார் - ஒருமுறை கொலரை செரிப்படுத்திக் கொண்டார் சுற்றும் முற்றும் பார்த்து விட்டும் மீண்டும் அமர்ந்தார். இப்போ மாணவதலைவர்கள் மீது வாஞ்சை வந்தது, அவனுகள் விவாதம், நாடகத்தில் காட்டிய ஆளுமை கருவத்தையும் சந்தோசத்தையும் தந்தது - இனிமேல் இவுனகள் என்ன சொன்னாலும் கேக்கலாம் எண்டு தோன்றிற்று.

இது தான் அரும்புகிற மீசை முறுகுகிற தருணம், மார் புடைத்து தோள் விடைத்து சிங்கங்கள் மாதிரி..... ஜிவ் எண்டு மண்டைக்குள் ஏறுகிற போதை சொல்லால் வடிக்கவொணா உணர்வு - ரதியும் மன்மதனும் நிறைய அம்புகளோடு களம் காணுகிற கணம். அவசரத்தில் ஒழுங்கில்லாமல் நடக்கிற போட்டிகளுக்காய் departmet காரர்களோடு ஆசிரியர்கள் சண்டை பிடிக்கிற தருணம். எனக்காக என் கல்லூரி, ஆசிரியர்கள் மாணவ தலைவர்கள் அண்ணாமார் பின்னே நிற்பார்கள் என்பது புரிகிற பொழுது.

இது என் கல்லூரி எண்டு உணர்வு மேலோங்குகிற தருணம், மண்டை கனக்கும், கைகள் பையில் தைக்கப்பட்ட சின்னத்தை முத்தமிடும், தலை கால் புரியாத வெறி அது - வேண்டியதே. இவன் என் கல்லூரியின் மாணவதலைவன் - இத்தனை பேரை கட்டி-மேய்த்து, சொல்லிக்கொடுத்து, பயிற்றுவித்து, உற்சாகப் படுத்தி, தட்டிக் கொடுத்து, தட்டிக் கேட்டு, இடையில் கன்டீனுக்கு கூட்டிப் போய், காசு கொண்டர மறந்தவனுகளுக்கும் சேர்த்து வாங்கி பகிர்ந்து உண்டு, பகிர பங்கு பெற சொல்லிக் கொடுத்து, வெற்றி வாங்கி, அதை கொண்டாட சொல்லிக் கொடுத்து, கொண்டாடி மகிழ்ந்து - இவன் அண்ணா - என்னை அடித்தாலும் மிரட்டினாலும் நான் பணிய வேண்டிய; பணிய விரும்புகிற அண்ணா எண்டு தோன்றுகிற தருணம். அவன் அடையாளப் படுத்திக் கொடுத்த மேடையில்த் தான் நான் ஏறி முழங்குகிறேன், அக்காமாரும் நடுவர்மாரும் எல்லாரும் அவன் வெற்றியையும் பெருமையும் ஏலவே எங்களுக்கு ஏற்றித்தான் பார்க்கிறார்கள்; கூடவே எதிர்பார்ப்பும். இந்த அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் தந்தவனுக்கு நான் பணிவது என் கடமை - எங்கள் எல்லார் வெற்றியையும் தட்டி குடுத்து பாராட்டிய அவன் வெற்றியை எப்படிக் கொண்டாடுவது - அவர்கள் பெயர்களை உரக்க கத்தினோம் -ஒரு லயத்தோடு
தமிழ் அண்ணா! தமிழ் அண்ணா! தமிழ் அண்ணா!
அறிவிப்பாளரோடு சேர்ந்து நாங்களும் உச்சரித்தோம் - சுபாஸ் அண்ணா- சுருதி சேர்த்தோம்- ஒரு புன்னகையோடு அதற்க்கு வழி விட்டார் அறிவிப்பவர். தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு தமிழ் தினப் போட்டிகளில் வகைப்பட்ட எல்லாப் பிரிவுகளிலும் விவாதம், இசை, நாடகம் எண்டு முத்தமிழிலும் ஈடு இணையற்ற வெற்றிகளைக் குவித்து விட்டுத்தான் இந்த விழாவிற்கு வருகிறது கல்லூரி. ஆனால் கண் பட்ட மாதிரி எங்கள் குழுப் பாடல் வகையில் அகில இலங்கை மட்டப் போட்டியில் ஒரு சின்ன சிக்கல் ஆகிவிட்டது.


திங்கள், ஜனவரி 30, 2012

கண்விதுப்பழிதல்

கண்விதுப்பழிதல்: 
(Eyes consumed with Grief)


எந்த சிவப்புமில்லாத facebook போல,
வெறுமை + ஏமாற்றம் தருகிறது
நீ கண்டுகொள்ளாமல் போவது.
கால் கடுக்க காத்திருந்த
எந்தன் வலிகளை ஒன்று திரட்டி
அனுங்கும் செருப்பின் முனகல் கூடவா
உந்தன் காதுகளுக்கு எட்டவில்லை.

என்ன அலட்சியம்!
எத்தனை திமிர்!

உனைச் சொல்லி குற்றமில்லை,
நீ ஓட ஓட,
துரத்தச் சொல்லுது என் அறிவு,
முன் சில்லுகளை துரத்தும்
பேரூந்தின் பின் சில்லுகள் மாதிரி.

வெள்ளவத்தையின் அந்த வசு வண்டி தரிப்பிடம்,
எரிக்கும் வெயில்,
ஒரு தெரு நாய்,
நிழலில் சுருண்டு போயிருந்த தாடி வளர்த்த அந்த பிச்சைக்காரன்,
நான்,
நீ.

உன்னோடு உன் இரண்டு தோழிகள்.
உன்னோடு வரும் போது
அவர்கள் தெரிவதில்லை - எண்டு
தெரியுமா அவர்களுக்கு?

நான் திருக்குமரன் சேரின் இரசாயனவியல் வகுப்பின் இடைவேளையின் போது ராஜ்பவனில் பரோட்டா சாப்பிட வந்ததாய் நினைத்துக் கொண்டிருக்குறது ஊர்.
இந்த இடைவேளையில் தான் இரசாயனவியல் நடக்கிறது என்பது திருக்குமரன் சேர் கூட ஊகித்திராத உண்மை.

எனக்கும்,
உனக்கும் (?)
அந்த நாயிற்க்கும் மட்டும் - தெரிந்த காதலை
தெரியாத்தனமாய்
காலி வீதியை நிரப்பி நிற்கும்
கடல் காற்றிடம் சொல்லி வைத்தேன்.

காதலை யாரும் காற்றிடம் சொல்லாதீர்கள்.

'ஊ' என்ற பேரிரைச்சலுடன்
ஊருக்கே சொல்லிப் போனது
அந்த மூடக் காற்று.
சாப்பிடு விட்டு ஊரே தூங்கிக்கொண்டிருந்த மத்தியானம் மூன்று மணி அது.
ஒரு விடுமுறை நாள்.
காற்றில் வந்த எந்தன் காதல் கிசுகிசுவை கேட்க்க யாருமில்லை.
கேட்க்க வேண்டிய நீயே கேளாத மாதிரி நடிக்கும் போது,
யாரோடு நோக?
யார்க்கெடுத்து உரைக்க?.

சூரியன் இத்தனை பிரகாசத்தைக் கொட்டியும்,
உன் முகத்தில் இருந்து வீசுகிற ஐொலிப்பை மறைக்க முடியாத ஆற்றாமையில் வெம்மையை கொட்டித் தீர்த்தான்.

ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பின்னழகும்
அதற்க்கு முன் மிகச் சில நொடிகளுக்கு மட்டும் முன்னழகும்.
அவ்வளவே....... பஸ்சிலிருந்து நீ இறங்கி கடக்கும் வரை.

ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பின்னழகும்
அதற்க்கு முன் மிகச் சில நொடிகளுக்கு மட்டும் முன்னழகும்.
அவ்வளவே.......

இரண்டு ஸ்கூப் ஐஸ்-கிரீமும் அதன் மேல் ஒரு செர்ரிப் பழமும் போல,
தகிக்கும் அந்த வெயிலுக்கு இதமாய்.

ஏன் பெரும்பாலும் பெண்கள்
சின்னதாக ஒரு செயின்
அதில் குட்டியாக ஒரு பென்டன் அணிகிறார்கள் ?
அதைக்கூட சட்டைக்குள்ளே ஒளித்து விடுகிறார்கள்.....
சொல்லாத காதல் போல
நீண்டு நெடிகிறது செயின்
அதில் சொல்லி சேர்ந்த காதல் போல
ஜம்பமாய் ஒரு பென்டன்.
(இதுக்கு மேல இதை விவரிச்சா சென்சார்ட்)

உனக்கு ஏன் அத்தனை அவசரம்,
வகுப்புக்கு நேரமிருக்கே - கொஞ்சம் மெதுவாய்த்தான் போவேன்.
உன் கூட வருகிற அந்த குட்டச்சி தான்
எதோ குடு குடுத்துக் கொண்டே (குடு குடுப்பை)
குடு குடுத்தாள். (குடு குடு வென ஓட்டம்)

போகிற போது சும்மா போகக்கூடாது ?
எதற்கு
உந்தன் கன்னத்து முடிக்கற்றை ஒன்றை
காதுக்கு பின்னல் பத்திரப்படுத்துகிறாய்.
வெளிச்சென்று தெரிகிற காது
நெருச்சென்று எங்கேயோ தைக்கிறதே,
அந்த ஒற்றைக் கல் காதோரத்தில்
ஊஞ்சலாட வந்த என் மனது சும்மா இராதே
முன்னே கொஞ்சம் சருக்கீஸ் விளையாட விரும்புமே.
தெரிஞ்சு செய்கிறாயா ?
இல்லை
தெரியாமல் செய்கிறாயா ?

காதிலிருந்து கண் எடுத்தால்,
பிரச்சனை இன்னும் 'பூதாகரமாகுதே'.

"இடையின் பின்னழகில்
இரண்டு குடங்கள் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்"
- (இது டீஆர்  எழுதினது நம்மட வரிகள் எண்டு டென்சன் வேணாம்)

'கூட்டி' 'ஆட்டி' என்று போடாமல் மீட்டி என்று போட்டதில் ஒரு நயமிருக்கு,
தம்புராவின் தந்திகள் இடமிருந்து வலம் மீட்கயிலே...
ஒவ்வொரு தந்தியும் ஒவ்வொரு நாதத்துடன்.....
அழுத்திய விரலிரிந்து மெலெளுமே.....
சட்டையை மடித்து மடித்து சுருக்கு தைத்திருப் பார்களே,
அந்த ஒவ்வொரு மடிப்பும் ஒரு தந்தி....
இனிமேல் இரவில் 'நேற்றைய காற்று' கேட்க்க கூடாது.
(மேலதிக விவரங்களை  உ.. ஊ.. ம ப த ப மா  பாடும் ஜேகே வைக் கேட்கவும் )

இன்னும் சில நொடிகள் தான் திரும்பி விடுவாள் - உருத்திரா மாவத்தைக்குள்.
எந்தன் பேர்சை தட்டிப் பார்த்துக் கொண்டேன்.
அதுக்குள் தான்
எழுதப்படாத காதல் கடிதம் ஒன்று
இன்னமும் இருக்கிறது.
கடிதம் எழுதத் தான் அந்த காகிதம் வாங்கினேன்.
எழுத அமரும் போதெல்லாம்
அந்த அழகான காகிதத்தில்
அவள் முகமே தெரிகிறது.
எந்தன் அறியாமையை அதில் வடித்து
அந்தக் காகிதத்தின் அழகை கெடுக்க விருப்பில்லை.

அவள் பார்த்தாளா இல்லையா ?
dts surrounding இல் எந்தன் heart beat கேட்டது....
பாவி பார்த்தாளா இல்லையா ?
அந்த ரோட்டுத் திருப்பத்தில் திரும்பும் போது
கைகள் கன்னத்து முடியை காதுக்குப் பின்னல் ஒதுக்கி
கண் பீரங்கிகளுக்கு வழிவிட.....
பார்த்தாளா இல்லையா ?
சட்டென்று கடந்து விட்டாளே....
பார்த்தாளா இல்லையா ?
உங்களுக்கு தெரியுமா ? நீங்கள் கவனித்தீர்களா ?
அவள் பார்த்தாளா இல்லையா ?

எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாதமாதிரி மௌன சாட்சியாக இருந்தன அந்த பஸ் ஸ்டாண்டும், நாயும்.
ஊ என்று ஊளையிடும் காற்று பார்த்தாள் என்கிறதா இல்லை என்கிறதா.....

வியாழன், ஜனவரி 26, 2012

Miss.Veluppillai – My Inspiration.




In our lives, we meet a number of teachers; those who taught us how to walk, those who taught us how to ride a bike, those who taught us why an apple falls down, those who us taught how to handle a dinner set and finally those who taught us where god is. Culturally we see our teachers as gurus. Guru’s role is different from modern-day professional teachers, while guru’s make you realize, teachers teach. And yes, most of our teachers tend to hold the role of a guru and not just a professional teacher. Though we meet variety of teachers in our life, the school teachers are special, since they are attached with our school memories. I am honored to share my experiences with one of my guru, Miss.Veluppillai.

We like our teachers, we like them for various reasons. 
We like some of them because they are smart; 
we like some of them because they are attractive;
we like some of them because they are caring, and 
we like some of them because they can teach well. 
Most of all, we like some of them because they practice what they preach. 

Some teachers got the capacity to inspire; as a result you end up admiring them. Miss.Veluppillai is someone whom I admire for all of the reasons listed above - she is smart, attractive, caring, and a good teacher who inspires by her actions. I am sure there will plenty of students to talk about Miss.Veluppillai’s commitment to her job, her teaching style, tuition policy, knowledge in chemistry, the guts to say ‘I need to refer’ when we ask silly questions, and the support extended by her for students in various extracurricular/co-curricular activities.

But I am not going to emphasize those traits of our (former) vice principal in this article. I want to bring out the qualities I learnt from her, through an indirect learning. As an active, studious kid who likes to take in charge of ‘stuffs’, I kept seeking of individuals who are successful in carrying themselves positively and effectively. I once met her at Wellawatta market while shopping with my mom, she was walking calmly but with confident, with a neatly dressed saree, nice big sun glasses and a warm smile as always. I learnt my first lesson --style--, you become stylish by the way you carry yourself not by your color and physics - ‘The look’. From that day, I always remember the bahrathi’s lyrics “Nimirntha nan nadai neer konda paarvai….” whenever I see her walking.

Once in our 12 D, A/L Math class 2001, she was teaching organic chemistry, and a curious friend of mine raised a question. I don’t remember the exact question, but I remember that it was so specific, requiring the exact temperature at which some chemicals would react (I think it was about carbon and chlorine). She did not hesitate to answer that she needs to refer books to be precise. According to syllabus all we need to know is that, this reaction will be feasible at a very high temperature. She could have bluffed to defend her ego, or replied with the popular answer “it is not necessary for you at this level” and that is what I would have done with my level of maturity. I learnt another valuable lesson – “to say I don’t know when I don't know”.

I am sure that, she must have inspired most my fellow Hindu college brothers, through her leadership in helping the school administration, the way she managed school events ranging from annual prize giving to 50th jubilee celebration. As I said before, some teachers got the capacity to inspire; as a result you end up admiring them. While some inspire by words, only very few can inspire by action. Miss.Veluppillai did inspire me and continues to do so by her action and kind words. I am blessed to be her loving student and really proud for this opportunity to share a few experience about her. Miss will be a lost to Hindu college for sure. 

Hindu College is arranging a farewell party on 10.02.12 to honor her service. If you are interested in contributing please contact Dr.Prasanna Varun (HP 2005). I can share his contact if you request.
               
R.T.Uthayasanker
H.P 2000/2001

செவ்வாய், ஜனவரி 24, 2012

புத்தனின் ஊரில் புத்தர்கள்...

கண்ணிமைக்காது அந்த ஊர்வலத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆட்டம், ஆட்டம், ஒருகால் நிலத்தூன்றி ஒரு கால் தூக்கி அரை வட்டமாக கைகள் தாங்கி சுழன்று சுழன்று ஆட்டம்...
                           டண், டண், டண் டண,ணக்கட
                           டண், டண், டண் டண,ணக்கட
                           டண், டண், டண் டண,ணக்கட
                           டண், டண், டண் டண,ணக்கட

இனிமை என்று சொல்ல முடியாவிட்டாலும் அதில் ஓர் லயம் இருந்தது. அந்த ஒலி பழகிப் போனவங்களுக்கு ஒரு துக்கம் கவ்வியது. ஊர்வலத்தின் நீளமும் நிரப்பும் பார்த்தால் அதன் காரணத்தர் ஒரு முக்கியஸ்த்தர் என்று அனுமானிக்கலாம். பச்சையும் வெள்ளயுமாக கொடி பிடித்த கனவான்கள் கூட்டம் அந்த ஊர்வலத்தை முன் வகித்தது. பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ஆட்டக்காரர், தேவாரம், திருவாசகம், குளிர்பானம், அரிசி, அம்பட்டன், மனைவி, மக்கள், அந்தப் பிணம்.

எனக்கும் அந்த இறப்புக்கும் என்ன தொடர்பு. ஒரு முறை ஆழ மூச்சு விட்டான். அரச மரத்து இலைகள் அந்த மூச்சின் வலுவிலோ, தான் பழுப்பின் மூப்பிலோ, சந்தர்பவசமாகவோ சலசலத்தன.ஒரு குருவி அங்கிருந்து சிறகடிக்க காகம் ஒன்று கிளை கொண்டது. எனக்கும் அந்த சாவுக்கும் எந்த 'நேரடித்தொடர்பும்' இல்லை எனினும் அந்த சிறுவனின் மழித்த தலை ஒரு பந்தாகி வயிற்றுக்கும் வாயுக்கும் இடையில் கிளித்தட்டு விளையாடியது.மெல்லிதாக வியர்த்தது. வியர்வையின் வாசம், நாய் மூத்திரம் இருந்து எல்லை வகுப்பதை ஞாபகப் படித்தியது. அந்த சிந்தனையின் அருவருப்பை சகியாது பிணத்தை நோக்கினேன்.

இதோ இன்று பிணம் என்று சொல்லப்படுகிற இது, இவனாக இருந்த போது என்னோடு உறவாடியவன். என்னைப் போல் அரச போகம், அதிகாரம் ஆதிக்கம், ஆரவாரம்..... இன்று அடக்கம். அடக்கம்... என்னைப் போல் ? என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஒரு கரையாக கோடிழுத்து உதடு சிரித்தது. நமட்டு சிரிப்பா? நக்கல் சிரிப்பா ? ஒரு வேளை ஞானச்சிரிப்பா ?

பட பட வென வெடிச்சத்தம்.

எவ்வளவு ஆரவாரம், ஆணவம், ஆர்ப்பாட்டமாக வெடிக்கிறது.
வெடித்த பின்?
...........
............
குப்பை ! மண்ணோடு மக்கல், கைப்பிடிச் சாம்பல். நானும் வெடியும் ஒன்றா ? திரும்பவும் என்னை கேட்டுக் கொண்டேன். இப்போ சிரிப்பு வரவில்லை.என்னை நான் வேடியோடு ஒப்பிட்டதில் எனக்கு என்னை பிடிக்க வில்லை. அவனை சொல்லலாம் இப்போ எரியூட்டப் படப் போகிறானே அவனை சொல்லலாம்.

பிரார்த்தனையில் இருந்த போது உலோகக் கூர் முனை நெஞ்சு பிளக்க இறந்து போனான். நானா காரணம் ? நானா தாக்கினேன் ? நானா தாக்கியவனை எவினேன் ?

ஏன் எனக்கு மீள மீள இந்தக் கேள்வி - நானா காரணம் ?

சட்டென்று அந்த மொட்டைத்தலை சிறுவன் கண் முன்னே தோன்றினான். தலை பெரிதாகி என்னை நிரப்பி இறுக்குவது போல இருந்தது பின் மறைந்து போனது.

நேற்று, அந்த அரச விழாவில் ஏதோ சொன்னார்களே.... ஆ...
"செய்பவனும் நான் செயலும் நான் அதன் பயனும் நான்" என்றான் கண்ணன்.
அப்போ நான் எப்படிக் காரணமாவேன்.
ஒரு காய்ந்து போன அரசமிலை
காற்றில் நடமாடியது,
மிதந்தது,
ஒய்யாரமாய் ஊஞ்சலாடியது,
கொஞ்சம் முன் சென்று பின் காட்டியது,
சட்டென அம்பாகி 'நோக்கி நகர்ந்தது',
வளையம் வளையமாய் சுழன்று
பின் சட்டென நிலத்தில் சரண் புகுந்தது.

அரசமிலைக்கு நிலம் சரணா? சமாதியா ?
என் கற்பனை செரியா ?
கேள்விகள்.... கேள்விகள்.....கேள்விகள்......

அரசமிலையில் இறந்தவன் முகம் தெரிந்தது. மீண்டும் தனது வாழ்க்கையையோ மனித வாழ்க்கையையோ ஒப்பிட விருப்பமில்லை - தான் ஒப்பிடப் படாதது பற்றி எந்த பிரக்ஞையும் இன்றி சருகாகிக் கொண்டிருந்தது அந்த அரசமிலை.

போதும் என்று தோன்றியது, தலை விண்ணென்றது.

ஆமாம் புத்தன் எத்தனையாவது சாவில் ஞானியானான் ?
ஞானம் தந்த சாவுக்கு முன் அவன் சாவே 'தரிசித்தது' இல்லையா ?
அல்லது அது தான் அவன் உற்றுக் கவனித்த முதல் சாவா ?
அரச மரத்திற்கும் ஞானத்திற்கும் என்ன தொடர்பிருக்கும் ?
கேள்விகள்.... கேள்விகள்.....கேள்விகள்...... 
காற்றில் பறக்கிற பட்டத்தை வால் துரத்துகிற மாதிரி
மீண்டும் மீண்டும்
கேள்விகள்.... கேள்விகள்.....கேள்விகள்...... 

அரை வயித்தியன் ஆவதற்கே ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும் என்றால் ஞானியாவதர்க்கு.... எனக்கு கணக்கு அவளவா வராதே....

நான் ஞானியாக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

ஊர்வலம் கண்ணுக்கெட்டிய வரைக்கும் தெரியவில்லை, வீதி சாதாரணமாக மிகச் சாதாரணமாக ஆகியிருந்தது - கடந்த சாவின் அடையாளம் ஏதும் தெரியவேயில்லை.

எதோ புரிந்தாற் போல் இருந்தது - எதோ புரிந்தாற் போல் சிரித்துக் கொண்டேன். அரச மரம் அச்சிரிப்பிற்க்காய் சில பழுத்த இலைகளை உதிர்த்தது.

ஒரு முக்கிய செய்தி, தலைப்பு செய்தி ஆகி, மறு பக்கம் பார்க்க, ரண்டாம் பக்கம் ஆகி முப்பதாம் நாள் நினைவு....

விழுந்த பழுத இலைக்குப்பைகளை பொறுக்கி எடுத்துப் போட்டு விட்டு மீண்டும் அண்ணாந்து மரம் பார்த்தான் அந்த வேலையாள்.

அதைப் பார்த்ததும் கண் காத்து வாய் எல்லாம் பிரிந்து திறந்து சிரித்தேன் நான்.

உளவுத்துறை அந்த வேலையாள் அன்றிரவு தான் மனைவியிடம் கேட்டதாகச் சொன்னது
"ஏண்டி அலரி மரத்துக்கு கீழ நிறைய நேரம் நிண்டா விசராக்குமே ?"


இந்த படங்களுக்கும் இந்தக்கதைக்கும் எந்த தொடர்புமில்லை...
- யாவும் கற்பனை

சனி, நவம்பர் 19, 2011

மனிசப் பூ மாலையிட்டா மரியாதை ஆகாது !


சோலை, குயில், காதல், சொன்ன கதை அத்தனையும்
மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே 
தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டு கொண்டேன்
ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும் ,
வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க 
யாதனுஞ் சற்றே இடமிருந்தாக் கூறீரோ ? - குயில்ப் பாட்டு: பாரதி

புரியாமல்ப் போனாலும் - என்னெழுத்து 
புரிந்து கொண்டார் கோமகனார் 
பெரியண்ணா
எந்தன் 
உருவாகி 
அறிவாகி 
திருவாகி
நின்ற நீர் 
கருவான கதை எண்டறிந்தும்,
பவிசேதும் பாராது,
பாராட்டி சீராட்டி 
என் கனவுக்கு கிட்டே 
கை பிடிச்சு வந்த கணம்
யுகம் யுகமாய் இருவருமே சேர்ந்து பிறந்த கதை சொன்னதுவே,

சொன்ன கதை சிலதிருக்க 
தலையை சொறிந்தபடி 
புனகையில் கண்ட கண்கள் 
சொல்லாத கதைகளெல்லாம் 
சொல்லிப் போன சுகமிருக்கே - நாளை
என் 'பள்ளி'ப் பாடத்தில் 
படிப்பேனா தெரியலையே.

ஆட்டுக் கல்லினிலே 
அம்மாவாய் இருந்தபடி 
பீட்ரூட் தீத்தினது நினைவிருக்கும்.
பேசாம பீற்றூடே திண்டபடி இருந்திருக்கலாம் 

இளந் தேங்காய்ப் பூ,
இறுகப் பிடித்த புட்டு 
உள்ளிருக்கும் 
கள்ளிருக்கும் பீட்ரூட் துண்டு;
திருவலையில் இருந்தபடி 
வாய் திறந்திருந்த எனக்குள்ளே
மன அறையில் ஒரு ஆசையுண்டு,
அந்த ஆட்டுக்கல்லேறும் தகுதி 
எனக்குத் கடைந்தேறுமா எண்டு.

இந்த சிட்டுக்குருவி பறக்க
வானமாய் வந்தீர் 
வானமளக்கும் ஆசை 
வந்ததென்ன குருவி தப்பா ?


இது ஆசை + மோகம் = மடம் என்ற கதை தொட்டு அறிவுடை நம்பி கலிய பெருமாள் இந்திரன் , அறிவுடை நம்பி கலிய பெருமாள் சந்திரன் என்று பிரிந்து நின்று முரண்டது வரைக்கும் தொட்டு, துழாவி (ஜே.கே. இன் "கடவுள்கள் துயிலும் தேசம்", "காதலிகள்", "எழாம் அறிவுடை நம்பிகள்" மேலும் சில ) திளைத்தபிறகு , என் அண்ணா ஒரு பெரிய sms அனுப்பி 2hrs video call கதைச்ச பிறகு, பழைய நினைவுகளில் அந்தரித்த போது எழுதியது. இந்தியன் ஆமி பிரச்சனைக்  காலத்தில் சில காலம் பீட்ரூட் மட்டுமே புட்டோடு சாப்பிட காலத்தை, இந்த சிட்டுக்குருவிக்கு போதி மரமாய் வந்து நிண்ட பெரு வெளியை, அதில் நான் கண்ட வெயில், மழை, வானவில் என்பவற்றை நினைவுகளில் அந்தரித்த அவைஸ்தையில் அவதரித்தது இந்தக் கவிதை. வானவில்லில் பச்சை நிறமாக வந்ததிந்த குயில் பாட்டு. 


இந்த நல்ல தருணம் அமைய வழிகோலிய ஜேகே அண்ணைக்கு 90 நாட்களை தாண்டிக் காதலிக்கும் மைதிலி அக்கா(க்கள்) அமைய நல்லூரானே காப்பு. 
இந்தப் போர், ஜேகே மாதிரியான திறமையான ஆளுமைகளை எங்கள் செம்மண் புழுதியிருந்து கடத்தி சென்று மெல்போர்ன் குளிருக்குள் விறைக்க விட்ட விதியை அண்ணா நிறையவே நொந்து கொண்டார். 


அண்ணாக்கள் எனக்கு சொன்ன கதைகளிளிருந்தே என் கனவுகள் வந்திருக்கு...
உங்களுக்கு எப்படி ?

வியாழன், நவம்பர் 03, 2011

ஆசை முகம் மறந்து போச்சே....II


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..... 

எங்கள் விவாத அணி டிஸ்கஸ் பண்ணுரதெண்டால் ஒரு ஒதுக்குப்புறமாக தனித்த வகுப்பறை தேடுவம். எங்கட விவாத நுட்பங்கள் ஒற்றறியப்படாதிருக்க எண்டு நினச்சா, அது தவறு, மகா தவறு. நாங்கள் ஒரு ரண களம் பண்ணிடிவம் எண்டதால. மீனி தான் எப்பவும் களப் பலி. வழக்கமா ஒரு தலைப்பெடுத்தா வகுத்தல், பிரித்தல், தொகுத்தல், பொல்லு, எண்டு நாலு படி அமைப்பில் ஆராய்வம். எல்லாத்தையும் வழக்கமா மீனி கவனிக்கும் மீனியே ஏதாவது மிஸ் பண்ணிட்டு எண்டா அதை கண்டுபிடிக்கிறதுதான் என்ட வேலை. கமி பிரித்தலுக்கு பிறகு தனியே தயாரயிடும்; எனக்கு தயாராக எந்த வேலையுமில்லை. சட்டப்படி மீனிக்கு அசிஸ்ட் பண்ண வேணும் ஆன நடக்கிறது தலை கீழ்.

மீனி தலைப்பை வகுக்கும் போது எல்லோரும் கொஞ்சம் கவனிப்பம்; பிறகு யாருக்கு என்ன வேலை எண்டு பிரிக்கேக்க ஜெனா பாடத் தொடங்கீடுவான். தொகுத்தல் - எல்லாரும் ஒரே புரிதலில் இருக்கிறமா எண்டு ஒரு நூல் குடுப்பம் (இது கொஞ்சம் சிக்கலான நுட்பம் இதை இங்கே விளக்க அவசியமில்லை). பொல்லு எண்டா எதிரணிக்கான பொறி - கேள்விகள் அல்லது ஒரு எதிர்பாரா மறு வாதம் இருக்கும் அவர்களுக்கு சார்பான ஒரு ஓட்டை, தெரிந்தே யாரவது ஒருவர் - மீனி (தல) அல்லது கிருபா/ பாத்தி (ரண்டாம் விவாதி) கொடுக்குற உளுந்த பொல்லு. எடுத்தடிச்சா எதிரணியில் எல்லாரும் அடிப்பினம் ஆன பிரயோசனமில்லை அது சப்பை கட்டு கடைசியா நான் அது சப்பை கட்டு எண்டு சொல்ல வேணும் இல்லாட்டி மீனி. 

இந்தப் பொல்லும் நூலும் - பாட்டும் கூத்துமா நடக்கும். என்ட வேலை எதிரணி எப்படி எல்லாம் காய் நகர்த்தும் எண்டு எதிர்வு கூறுறது; மீனி அதுக்கேத்த மாதிரி தயாராகும்.  நியாயமா எதிர்வு கூறுறது - சும்மா பில்ட் அப் பண்ணி மினிய டென்சன் பண்ணிடுவம் - ஜெனாவை நேரத்திர்கேற்ப பாடச்சொல்லி  ஒரு நாடகம் அரங்கேற்றுவம். மீனி மேலும் பிபி ஏறி, ரண்டாம் விவாதியை வறுத்தெடுக்கும் (உள்ளத்தில அவர்தான் சின்னவரு). பாத்தி எண்டா நமட்டு சிரிப்போட வறுபடும் கிருபா பாவம் அவனும் மீனி மாதிரி சீரியஸ் கேஸ். எங்கட அலுப்பில மீனி கை நிகம் முடிச்சு காலுக்கு போய் திரும்பி கையையே கடிக்கிற அளவுக்கு போயிடும். எவளவு அலுப்பு குடுத்தாலும் தாங்கினதாலதான் அவர நாங்க நல்லவாஆஆர் எண்டு சொல்லுறனாங்கள்.

ஜெனா குரல் ஜேசுதாஸ் அளவுக்கு இல்லாட்டியும் அதில ஒரு இசைவு இருக்கும், அவன் அனுபவித்து பாடுறதுதான் எண்களிண்ட வெற்றியின் ரகசியம். அம்மாவைப் பற்றி எஸ்.ஜே.சூரியா பாடுற பாட்டு "ஆசைப் பட்ட எல்லாத்தையும் "  அவன் அதை முந்தியே பாடுறவன் - எங்கட ஊர் நாட்டுப் பாடல் ஒண்டத்தான் களவெடுத்தவனுகள். ஜெனா பாடினா ஒரு பத்துப் பரப்பு மிளகாய்த் தோட்டம் எழுதி வைக்கலாம் - சுர்ர் எண்டு ஏறும் - தென்மராட்சி கள்ளு மாதிரி - கண்ணு கலங்கி வார்த்தை தளரடிச்சிடும் .

என்னில் ஏற்பட்ட சலனத்தை யாரும் கண்டு கொள்ளக் கூடாது எண்டு கொஞ்சம் சீரியஸா டிஸ்கஸ் பண்ணினதை யாரும் பெரிசா எடுக்கேல்ல. மீனியை கிண்டுற மூட்ல நான் இல்லை, ஜெனாவை லொள்ளு பாட்டுகளை விட்டுட்டு கொஞ்சம் கள்ளுப் (காதல்) பாடல்கள் பாடச் சொன்னன். நல்ல காலம் கமி கவனிக்கேல்லை. இந்த சலனம் போட்டியில கொண்டர இருக்கும் சறுக்கல் பற்றி தெரியாம நான் பாட்டுக்கு பாட்டை ரசிச்சபடி - என் மனசென்னும் செந்தாழம் பூவில் ஒரு தென்றல் வந்தாடியது - சிமிக்கி ஆடியதால தென்றல் வந்ததா இல்லை தென்றல் வந்து சிமிக்கியை ஆட வைச்சுத்தா - பாவம் நானே confuse ஆகிட்டன்- ஒரு மேசைக்கு மேலிருந்த படி ஜெனா பாடிக்கொண்டிருந்தான் - செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..... - திருப்பி வைச்ச கதிரையில் இருந்து கொண்டு நான் லயித்திருந்தேன். எங்களுக்கிடையில் ஒரு முத்து சிமிக்கி எனக்கு மட்டும் ஆடிக்கொண்டிருந்தது. அந்த தோடு முடிகிற கழுத்து தோள் வளைவிலேயே எனது மனது மயங்கி கிறங்கி தங்கிக் கொண்டு வர மறுத்தது. அவசரமாக மளித்ததில் தப்பித்த ஒரு மீசை முடி, மூக்குக்கு கீழே முறுக்கு கொண்டது.

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா ...

ஜெனா பாடுற மாதிரி எனக்கு தெரியேல்லை , யாரோ கூப்பிடுற மாதிரி பட்டது, (எல்லா விவாதத்துக்கும் தண்ணீர் ஒரு போத்தல்ல கொண்டு போறது என் வழக்கம்) ; மச்சி தண்ணி எடுத்துட்டு வாறன் எண்டு களண்டுட்டன். அந்தக் கட்டடத்தின் ஒரு மூலையில் நாங்கள் தயார் படுத்திக் கொண்டிருந்தம் மறு மூலையில் கார்டன் பைப் ஒன்று இருக்கும், நடுவால இருக்கிற வாசல் தேவலயத்திற்கும் ஹோலுக்கும் நடுவிலுள்ள புல் மைதானம் நோக்கி இருக்கும் - மையத்தே தூபி கொண்ட, வட்டப் புல் மைதானம் அது - நாலு பக்கமும் இருந்து தூபி நோக்கி போகும் பாதை பரி தோமா மாணவ தலைவர்களுக்கு மட்டும், நாங்கள் மாறி நடந்துட்டா எங்கிருந்துதான் எண்டு தெரியாம வந்து மறிச்சிடுவானுகள் . அந்த வாசல் வழி ஒரு வளையல் கை தூணைப் பற்றி விடுவித்துக்கொண்டது - பிரமையா எனக் கிறங்கும் தருணத்தில் வேகமாக யாரோ ஓடும் சத்தம் கேட்டது. பார்த்துவரலாம் என்று முன்னேறினால் மீண்டும் ஓம்பி - "மச்சி டைம் முடிஞ்சிட்டுது - ரெடியா எண்டான்". இவனை என்ன செய்யலாம் எண்டு நீங்களே முடிவு பண்ணுங்கோ - என்ன இருந்தாலும் என்ட நண்பன் எண்டு ஆகிட்டான்.

வரும் போட்டியில் பொல்லு என்ட பக்கம் திரும்ப இருக்கிறதைப் பற்றி அறியாம இந்த களேபரத்தை விட்டுட்டு நான் விவாத அறைக்குள் நுழைந்தோம். சட் என்று ஞாபகம் வந்திச்சிது மறந்துட்டேனெண்டு - பொல்லு என்ன எண்டு மறந்திட்டன் , பொல்லு என்னடா எண்டு கேக்கலாம் எண்டா அதுக்குள்ள சத்தியசீலன் எழும்பி "பரி தோமாவின் விவாதப் போட்டி முதல் சுற்றுக்கு உங்களை வரவேற்கிறேன் ..." எண்டு தொடங்கீட்டான். விவாதம் தொடங்கீட்ட பேசா ஏலாது, கண்களால் கைது செய்தாதான் உண்டு, அரிதா பக்கத்திலிருக்கும் விவாதிக்கு துண்டில எழுதிக் குடுப்பம், அவளவே, விளங்காட்டி அவர் திருப்பி துண்டெழுதுறதில்லை - எழுதேலாது எண்டுறது ஒரு எழுதாத விதி. ஒரு தவிப்போடு நகர்ந்தது அந்த விவாதம் - அடுத்த பகுதியில்.