செவ்வாய், ஜூன் 29, 2021

வைரமுத்து : Repeatu



வைரமுத்து பற்றி நேற்று சிலாக்கியமா பேசினோம், அதில அவருக்கு பிடித்த சில உவமைகள் மீள பயன்படுத்துவார் என்று ஒரு குறிப்பை முன்வைத்திருந்தேன்:
மீன் அழுகை:
------------
"தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல" - சங்கமம்
"கடலில் மீனொன்னு அழுதா கரைக்கு சேதி வந்து சேருமா??" - பூமி
நீரும் மாரும்:
------------
"நீராக நானிருந்தால் – உன்
நெத்தியில நானிறங்கி
கூரான உன் நெஞ்சில் – குதிச்சி
அங்க குடியிருப்பேன்" - முதல்வன்

"மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே" - கருத்தம்மா

அப்புறம் sensuality பற்றி பேச்சு வந்தது.
அதில, அவள் "கன்னியென்பதை இந்தமழை கண்டறிந்து சொன்னதுவே", இதில ஒரு டவுட்டு கிளப்பியிருந்தேன்;
அதெப்படி மங்கை என்று பெண் பருவம் சொன்னா ஓகே, கன்னி ?? How is it possible ?

It is possible.
புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ, புரியாதவன் புரிஞ்சவன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க.

இந்த இடத்தில வைத்தியர் பிரசன்னா ரெண்டு விடயங்களை குறிப்பிட்டார்.
ஒண்டு பெண்களும் sensuality புரிதலும் சம்பந்தமா ஒரு புள்ளிவிவரம்: 70:30.
இதுக்குமேல நான் அதை இங்க சொல்லி யாரிடமும் சாபம் வாங்க தயாரா இல்லை.

மற்றது, சுட சுட நனைந்தது என்ன ? என்று கேட்டிருந்தார்.
தோசைக்கல்லா என்று கேட்டிருந்தேன்,
இல்லையென்றார்.
வியர்வை என்றேன்,
இல்லை இது பெண்பாடுகிற வரி, தனியா தலைப்பு போடுங்க வந்து பாடமெடுக்குறேன் என்கிறார்.
வேற ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக