செவ்வாய், ஜூன் 29, 2021

அக்கா புராணமும் சாமியார் பஜனையும்


சிவமயம்
அக்கா புராணமும் சாமியார் பஜனையும்
------------------------------------

நான் உணரும் அவதானிக்கும் விடயங்களில் இருந்து உய்த்தறிதல் என்பது கற்றலின் மிக அடிப்படையான விடயம். உய்த்தறிதலில் abductive reasoning என்றொரு வகையுண்டு. இது பெரும்பாலும் அறியப்பட்ட deductive மற்றும் inductive இலிருந்து நுட்பமான முறையில் வேறுபடுகிறது. abductive reasoning ஒரு அவதானிப்போ அல்லது ஒரு தொகை அவதானிப்பிலிருந்து இலகுவான அதேசமயம் அதிக சாத்தியமுள்ள ஒரு முடிபுக்கு வருதல் ஆகும். deductive மற்றும் inductive போலல்லாது இது ஒரு சாத்தியத்தையே முன்வைக்குறதன்றி, அதை நிறுவுவதில்லை பரிசோதிப்பதுமில்லை. பெரும்பாலும் பரிசோதனை அல்லது நிறுவலுக்கான வாய்ப்பு இல்லாத இடங்களில் இம்முறையை கைக்கொள்ளுவது வழமை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின் நடுப்பகுதியில் அமெரிக்க தத்துவவியலாளர் சார்ள்ஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் என்பவரே இந்த முறையை முதன்முதலில் ஆவணப்படுத்துகிறார். இம்முறையை நாம் நாளாந்தம் பயன்படுத்தும் நல்ல உதாரணங்களாக, நீதிமன்ற ஜூரிகளின் முறைமையையும், வைத்தியரின் நோய் கண்டறியும் முறைமையையும் கொள்ளலாம். abductive reasoning முடிப்புகளை "best available" or "most likely" என்று டிஸ்கியோடே அறிவிக்க வேண்டியிருக்கு. ML , AI கூட இதுதான் பண்ணுகிறது.

Paranormal / அமானுஸ்ய விடயங்களை, தத்தம் அறிவு, புரிதல், பரிசோதிக்கும் வாய்ப்பு, முன்முடிப்புகள், அதுசார்ந்த பயம், ஆர்வம் போன்ற அதீத உணர்வுகள் என்ற பின்புலத்தில் ஆராய முற்படும் போது, கடவுள் என்றோ பேய் என்றோ ஒரு abductive reasoning செய்குறார்கள். இந்த அமானுஸ்யத்தை தொழில் முறைப்படுத்துபவர்கள் மற்றும் இதை ரசிப்பவர்கள் (நம்பிக்கையோடு) இதை பிரசாரிக்கும் போது இதை deductive மற்றும் inductive reasoning முறைக்குள் கொண்டுவருகிறார்கள் இல்லை ஆனால் அந்த முறையில் முடிப்புசெய்யப்பட்ட விடயங்களுக்கு சமமாக இதை பிரசாரிக்கவும் விளைவாக புனைந்து சொல்லவும் முயல்கிறார்கள். இந்த குழப்பவாதிகளாலே சுவாரசியமான abductive reasoning வகைகளை கூட எள்ளுகிற நிலை இங்கு இருக்கு. இந்த எள்ளல் முறையாக abductive reasoning செய்ய முயலுறுகிறவர்களை கூட காயப்படுத்தி ஒதுக்குற விளைவை உண்டு பண்ணுகிறது.

இதில் இன்னொரு சுவாரசிய முரணும் உண்டு. abductive reasoning செய்பவர்கள் சிலர் தங்களுக்கு தவத்தலோ மெடிடேசனாலோ அல்லது யோகம் சித்து கலை பயிற்சியாலோ, குருவருள் இறையருள் திருவருளாலோ மற்றவர்களை விட ஒரு சூப்பர் natural நிலை வந்துவிடுவதாகவும் அதனால் அவர்களுக்கு இந்த reasoning abductive அல்ல inductive ஆகிவிடுகிறது என்று ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். இதை முற்றாக ஒதுக்க முடியாது. ஒரு மிகச்சவாலான, inductive reasoning வழிவந்த, ஏலவே பரவலாக விஞ்ஞான முறைமைகள் நம்புகிற விடயத்தை முரண்படுகிற. ஒரு தியரியை ஆரம்பத்தில் எல்லோரும் இலகுவில் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டோம். சிலர் அதை abductive reasoning என்றோ அல்லது falacy என்றோ கலாய்த்திருக்க கூடும்.

ஆனால் ஒரு விடயம் ஆயிரமாண்டுகளாக abductive reasoning ஏரியாவிலேயே: இருக்குறபோது, அதன் உபகூறுகளை deductive / experimental கொண்டு காலகாலம் தெளிவூட்டி முரண்படுகிறபோது இது reasoning கூட அல்ல இது ஒரு reasoning bias என்றாகிறது என்கிற வாதத்தையும் மறுக்கவியலாது. reasoning bias என்றால் தான் நம்புகிற விடயத்தை ஒரு வகையான உய்த்தல் முறைமைகளையும் தான் நம்பாத விடயங்களுக்கு இன்னொரு வகையான உய்த்தல் முறைமைகளையும் பயன்படுத்தலாகும். கடவுளை மறுப்பவர்கள் கடவுள் பற்றி ஒருவர் சித்தாந்தத்தை வைக்க முயலும்போதே சங்கி என்பதும், கடவுளை நபுகிறவர் கடவுள் ஏன் இல்லை என்று கருத்தை முன்வைக்க முயலும் போதே anti indian என்றும் உடனடியாக உடனடியாக கலாய்த்தல் reasoning bias. இரெண்டையுமே ஒரே மாதிரியாக கலாய்ப்பவர்கள் அல்லது இரெண்டையுமே ஒரே மாதிரியாக கேட்பவர்கள் reasoning bias இல்லாதவர்கள். ஆனால் எதையுமே பாரபட்சமின்றி இறங்கி கலாய்ப்பவர்களிடமும் எல்லாவற்றயும் கண்மூடி கேட்டிருப்பவர்களிடமும் rethinking இற்கான சாத்தியங்கள் எவ்வாறு வேறுபடும் என்பது பற்றி வேறொரு பொழுதில் பார்க்கலாம். Now back to reasoning bias.

பல்வேறுபட்ட ஆராச்சிகள் Paranormal / அமானுஸ்ய நம்பிக்கையாளர்களிடம் reasoning bias இருக்கும் என்று நிறுவுகின்றது. மேலும் இவர்கள் தற்போதைய கற்றல் முறைமையில் ஆற்றல் குறைந்தவர்களா இருக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்று objective ஆக deductive மற்றும் inductive reasoning முறைக்குள் நிறுவுகிறார்கள். அப்ப சமயவாதிகள் எல்லாரும் ஆற்றல் குறைந்தவர்களா ? இங்கதான் ட்விஸ்டு, கடவுளை மறுப்பவர்களுக்கு working memory performance குறைவாக இருக்கும் சாத்தியம் அதிகம் என்று ஒரு ஆராச்சி கட்டுரை நிறுவுகிறது. working memory performance ஐ RAM இற்கு ஒப்பிடலாம். இது நினைவாற்றல் அல்ல.

செரி இப்ப சொல்லுங்க நீங்க ரஜனி fana கமல் fana ?

அப்பா மீது ஒரு குற்றப்பத்திரிகை:


நட்ட நாடு ஹாலில்
கைகள் பிசைந்தபடி
அப்பா தலைகுனிந்து நின்று
அன்றுதான் நான் பார்த்தேன்,

கத்தரிக்காய் சூத்தை
ஆச்சி பாவம் எண்டு 1750 ரூபாய்க்கு முழுதுமே மீன் வாங்கியது
ஏலவே வாழை பழமிருக்க பாப்பா பழமொண்டு பெரிசா வாங்கியந்தது

நட்ட நாடு ஹாலில்
கைகள் பிசைந்தபடி
அப்பா தலைகுனிந்து நின்று
அன்றுதான் நான் பார்த்தேன்,

புதுசா டவுசர் சேர்ட் எடுத்துக்கொடுத்தா அதை அலுமாரிக்குள்ள எங்காவது வைச்சுட்டு பழசையே போட்டு திரிவது
சுந்தரலிங்கம் மாமாவை முன்னறிவிப்பின்றி மத்தியானம் சாப்பிட கூட்டி வந்தது
கிளினிக்குக்கு வந்த ஆச்சிக்கு ஆசுபத்திரிக்காசையும் குடுத்து பஸ்ஸுக்கும் காசு குடுத்து விட்டது.

நட்ட நாடு ஹாலில்
கைகள் பிசைந்தபடி
அப்பா தலைகுனிந்து நின்று
அன்றுதான் நான் பார்த்தேன்,

தண்ட ஆட்களுக்கு ஏமாளியா உதவுறது
விவரம் பத்தாதது
முணுக்கெண்டு கோபம் வாறது

நட்ட நாடு ஹாலில்
கைகள் பிசைந்தபடி
அப்பா தலைகுனிந்து நின்று
அன்றுதான் நான் பார்த்தேன்,

தனக்கென்று சேமிக்க தெரியவில்லை
தனக்கென்று ஆசைப்பட தெரியவில்லை
தனக்கென்று எதுவுமே தெரியவில்லை
அம்மாக்களுக்கு தெரிவதில்லை அப்பாவால் மௌனமாக இருக்க முடிகிறது
அம்மாக்களுக்கு தெரிவதில்லை அப்பாவால் விலகி இருக்க முடிகிறது
அம்மாக்களுக்கு தெரிவதில்லை அப்பாவால் பிடியை விட முடிகிறது
#fathersday #2021

வைரமுத்து : Repeatu



வைரமுத்து பற்றி நேற்று சிலாக்கியமா பேசினோம், அதில அவருக்கு பிடித்த சில உவமைகள் மீள பயன்படுத்துவார் என்று ஒரு குறிப்பை முன்வைத்திருந்தேன்:
மீன் அழுகை:
------------
"தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல" - சங்கமம்
"கடலில் மீனொன்னு அழுதா கரைக்கு சேதி வந்து சேருமா??" - பூமி
நீரும் மாரும்:
------------
"நீராக நானிருந்தால் – உன்
நெத்தியில நானிறங்கி
கூரான உன் நெஞ்சில் – குதிச்சி
அங்க குடியிருப்பேன்" - முதல்வன்

"மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே" - கருத்தம்மா

அப்புறம் sensuality பற்றி பேச்சு வந்தது.
அதில, அவள் "கன்னியென்பதை இந்தமழை கண்டறிந்து சொன்னதுவே", இதில ஒரு டவுட்டு கிளப்பியிருந்தேன்;
அதெப்படி மங்கை என்று பெண் பருவம் சொன்னா ஓகே, கன்னி ?? How is it possible ?

It is possible.
புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ, புரியாதவன் புரிஞ்சவன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க.

இந்த இடத்தில வைத்தியர் பிரசன்னா ரெண்டு விடயங்களை குறிப்பிட்டார்.
ஒண்டு பெண்களும் sensuality புரிதலும் சம்பந்தமா ஒரு புள்ளிவிவரம்: 70:30.
இதுக்குமேல நான் அதை இங்க சொல்லி யாரிடமும் சாபம் வாங்க தயாரா இல்லை.

மற்றது, சுட சுட நனைந்தது என்ன ? என்று கேட்டிருந்தார்.
தோசைக்கல்லா என்று கேட்டிருந்தேன்,
இல்லையென்றார்.
வியர்வை என்றேன்,
இல்லை இது பெண்பாடுகிற வரி, தனியா தலைப்பு போடுங்க வந்து பாடமெடுக்குறேன் என்கிறார்.
வேற ?

கனவு காணாதீர்கள்


அன்புள்ள மகனுக்கு ,
அன்பும் முத்தங்களும்.

'கனவு காணாதீர்கள்' என்ற தலைப்பில் கட்டுரை வரைய உதவச் சொன்னாய்.
இது என்ன விசித்திரமான தலைப்பு என்று சிந்தித்தேன்.

உண்மைதான் கனவு காணாதீர்கள்.

கனவுகள் உனக்கு இறக்கைகைகள் தராது.
இறக்கைகள் இருப்பதாக நம்பவைக்கும்.
பறவைகளோடு முகில்களில் பறக்கும் அனுபவத்தை கற்பிதம் செய்ய சொல்லும்.
ஆனால் ஆசையோடு விரித்துப்பாரு
விழுந்து அடிபடும்.

கனவுகள்
தவளைகளை பார்க்கும் போது முத்தமிடலாமா என்று தோன்றவைக்கும்.
கனவுகள் பழைய அரண்மனைகள் மீது ஈர்ப்பை உண்டாக்கும்.

கனவுகள் ஒரு போதை,
யதார்த்தத்திலிருந்து விலக்கி ஒரு பொய் சுவர்க்கத்தில் உன்னை ராஜாவாக்கும்.
எல்லாவற்றயும் யாரையும் நம்பவைக்கும் - கழுத்து அறுக்கப்பட்டாலும்.
ஆதலால் கனவு காணாதீர்கள்.

சினிமாக்களுக்குள் தொலைந்துபோவாய்
புத்தகங்களுக்குள் தொலைந்துபோவாய்
பாடல்களுள் தொலைந்துபோவாய் - ஏன்,
உனக்குள்ளே தொலைந்துபோவாய்
ஆதலால் கனவு காணாதீர்கள்.

கனவுகள் முருங்கை மரங்களை பார்க்கும் போது வேதாளங்களை தேடவைக்கும்,
கனவுகள் உன்னை ஒரு மாவீரன் என்று நம்பிக்கை தரும்,
கனவுகள் சிம்மாசனத்தையும் பதுமைகளையும் தேடவைக்கும்,
கனவுகள் கால்களின் கீழே குழி பறிக்கப்படுவதை பற்றி கவலைப்படாமல் கடல் அலைகளை சினேகம் கொள்ள வைக்கும்.
ஆதலால் கனவு காணாதீர்கள்.

ஏவாள் கடித்த ஆப்பிள் பழம் - கனவுதான்.
கனவுதான் சாத்தானின் தூதர்கள்.
எதற்கும் விலகியே இரு.

பழைய விளக்குகளை துலக்கவும்
பழைய திரைசீலைகளுடன் பேசவும்
பழைய பாய்களில் பயணிப்பதுபோன்று பாவ்லா செய்யவும்
கனவுகளே தூண்டும்.

பழையவற்றின் மீது ஒரு அதீத ஈர்ப்பை உண்டாக்கும்.
கனவுகள் அனுபவங்களை அர்த்தமற்றதாக்கி விடும்.
நிஜம் எப்பவும் கனவுகளை தீண்டியதுமில்லை தாண்டியதுமில்லை.
தேவையற்ற ஏமாற்றம் சுற்றி மிஞ்சும்.
கனவுகளை விலக்கியே இருந்து பழகுங்கள்.

கனவுகள் தொடர்ந்து துரத்தும் வல்லமை பெற்றவை.
நிம்மதியாய் கொஞ்சம் நீட்டிப்படுத்திருக்க சற்றேனும் சம்மதியா கனவுகள்.
இயங்க துரத்தும் ,
துரோகங்கள், வீழ்ச்சிகள், இகழ்வு தாண்டி - நகர சொல்லும்.
அவை வேண்டா.

மேற்சொன்ன விடயங்களை கொண்டு கட்டுரை வரை.
நான் சொன்னது போல் எல்லாக்கட்டுரைகளும் முகப்பு, நடு, முடிபு என்று பாகுபடுத்தி கோர்க்கவேண்டும்.
நீ செரியாகச் செய்வாய் - என் பிள்ளை.

அப்புறம் மிக முக்கியமாய்.
கனவு காண்.
நிறுத்திவிடாதே.
உன் கனவுகளை தொடர்ந்து எனக்கு எழுது.

அன்பின்,
அப்பா.
இ.த
பி்.கு: உங்களை துரத்தும் கனவு என்ன ?