பம்பல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பம்பல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 15, 2012

இவங்களுக்கு வேற வேலை இல்லை ?

இவங்களுக்கு வேற வேலை இல்லை இருக்கு!

பாகம் ஒன்று - கூண்டை விட்டு…..

இலங்கை வடக்கே வாழும் வயோதிகர்களுக்கு, அம்மம்மா, அம்மப்பா -களுக்கு , அப்பப்பா அப்பம்மா -களுக்கு, அம்மா அப்பா -மார்களுக்கு,

இதுவரை வெள்ளவத்தை பஸ் வண்டித்தரிப்பிடம், கட்டுப்பத்தை, கத்தரிக்காய், காதல், வயதுப் பிரச்சனைகள் போன்ற வாலிப விடயங்களை மட்டும் விசாரித்து, விமர்சித்து எழுதி வந்த இந்த ஏதென்சு நகரத்து வாலிபன் முதல் முறையாய், பனை மரக் காடுகளில் மரத்துப்போன மனங்களும் விறைத்துப்போன கால்களுமாய் வாலிபம் கடந்த உங்களுக்காய் எழுதும் மடல்?, காகிதம்!, இல்லை விண்ணப்பம் என்று வைத்துக் கொள்ளலாம். இடைக்கு இடை எணை, அப்பு, ஆச்சி, ஆன்ரி, அங்கிள் எண்டு போட்டுக் கொள்ளுங்கோ.

வயது முடிந்த காலத்தில் வெத்திலை இடிச்சுக் கொண்டோ, இல்லை வயிரவ கோவிலடியில் விளக்கு ஏத்திக் வைச்சுக் கொண்டோ, இல்லை வாசகசாலையில் அரட்டை அடிச்சுக் கொண்டோ, ‘சிவனே‘ என்று நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் அ(ம்மா/ப்பா)(மா/பா) களுக்கு. வணக்கம்! (எணை காது நல்லாக் கேக்குதே?)

சுப்பர் சிங்கர்களுக்குள் புதைந்துபோன அம்மாக்களுக்கு வணக்கம். டீவிப் பெட்டியில் காட்டப்படாத இரத்தமும் சதையுமான ஒரு அழகான உலகம்- மனிதர்கள் போதாது வெறித்துப் போய் இருக்கின்றது. (வெளிய வந்தாத்தானே - முட்டாளாவதில் மகிழ்வது பெண்களாத்தான் இருக்கும், இப்ப கூடப் பாருங்கோ உங்கட ஆக்கவுடமையை பற்றி ஆதங்கப்படுவது புரியாமல் உங்கட அறிவுடமையை கேலி செய்வதாய் கோபப்படுகிறீங்க).

வேலை, விளைமீன் குழம்பு, சீலாமீன் பொரியல், கோயில் 8ம் திருவிழா மேளக்கச்சேரி, ஏறி வரும் விலை வாசி என்று பரபரத்துப் போன அப்பாக்களுக்கு வணக்கம். வாழ்க்கை என்பது என்ன என்பதே உங்களில் பெரும்பாலானர்களுக்கு நாப்பதுக்கு பிறகு மறந்து விடுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. சமூக வாழ்க்கை என்பது உங்களில் பலருக்கு கோயில் என்பதோடு நின்று போய்விடுகிறதோ என்ற நான் நிறைய அங்கலாத்திருக்குறேன்.

முடங்கிப்போன பெரியவர்கள், முயக்கம் இல்லாத தாய் தந்தையர், இளையதலை முறை ?

வாழ்வு என்பது வெற்றி தோல்வி என்ற முடிவைக் காட்டிலும் முயற்சியில் இருக்குன்றது என்று முயன்று வென்றவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

ஒரு பெரிய போராட்டம் அடித்து நொறுக்கப் பட்ட பின்னரும், கூட்டம் கூட்டமாய் இன சனம் அழிந்த பின்னரும் இந்த சமூகத்தின் எல்லாத் தேவை மட்டங்களில் (maslow’s hierarchy of needs)  இருக்கும் சில இளைஞர்கள் ஒரு கனவை (“Making Yarl the next Silicon Valley") நோக்கி நகரமுயல்கிறார்கள் –. உங்கள் ஊருக்கு உங்கள் பிள்ளைகள் ஒரு தேர் எடுத்து வந்திருக்குறாங்கள் – “Yarl Geek Challenge", கொஞ்சம் கை கொடுக்க வறீங்களா (ஒக்டோபர் மாசம் இருபத்தி ஆறாம் திகதியில் இருந்து இருபத்தி ஓம்பதாம் திகதி வரை)?



சுப்பர் சிங்கரில் யாழினி எடுபட்டது பற்றியும், அனு எடுபடாதது பற்றியும் அங்கலாய்த்துக் கொண்டு இருப்பீர்கள். ஒரு ரியால்லிடி ஷோவை நேரடியாய் யாழ் மண்ணில் காணும் வாய்ப்புக் கிடைச்சிருக்கு. அதுவும் உங்கள் பக்கத்து வீட்டுப் பெடியோ இல்லை, அடுத்த ஒழுங்கை குமரோ, தங்கள் அறிவுடமையையும் ஆக்கவுடமையையும் ஒருங்கே காட்டும் ஒரு போட்டி. உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக நீங்கள் இதுவரை கண்டிராத இலங்கையின் தலை சிறந்த மூன்று தனியார் தகவல் தொழில் நுட்ப கம்பனிகள் (Virtusa, WSO2, and hSenid) முதன் முறையாக ஒன்றிணையும் ஒரு மாபெரும் நிகழ்வு -  யாழின் மண்டைக்காய்கான தேடல். (நாமெல்லாம் மொழி பெயர்த்தா இலியட் ஓடிசி கூட 6 page 2 column research paper தான்)

       என்னதான் பண்ணணுவானுகள் ?
ஊரில மண்டை காஞ்சவனுகள் சிலர் சேர்ந்து, மூலை(ளை) முடுக்குகளில் கொம்புட்டார் வைச்சு நோண்டிக் கொண்டோ, விறாந்தில படித்துக் கொண்டு விலாசமா ஒரு கொம்பனிக்கு சீ.ஈ.ஓ கனவு கண்டுகொண்டோ, கணக்கு எண்டால் கணக்கு பண்ணுறதைக் கூட மறந்து விடும் - பேய்க்காய்களுக்கு ஒரு போட்டி - இந்த டிவியில எல்லாம் நடத்துற போட்டிகள் மாதிரி - ரியாலிட்டி ஷோ - "உங்களில் யார் அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ்?" கணக்கா. ஐந்தாறு சுற்று - ஒவ்வொரு சுற்றிலயும் - வடி கட்டி, வடி கட்டி ஒருத்தருக்கு.... 

        என்ன வெள்ளவத்தையில பிளட்சா (flats -  அடுக்கு மாடி மனை) ?

சீ சீ அதிலும் பெரிசா, கம்பனியே வைச்சு தந்தாலும் தருவானுகள் - நாட்டின் பெரிய கொம்பனியில வேலை , இப்படி பல உள் மற்றும் வெளிக் குத்து இருக்கு.

யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மொரட்டுவ போன்ற பல மாவட்டங்களுக்கும் யாழ் ஐரி பஸ் ஒண்டு போய் ரவுண்டு கட்டி வாக்கெடுத்து (ஒரு விளம்பரந்தேன்), சுமார் பதினாலு அணிகள் - பல்கலை கழகங்கள், பிரபல்யமான தனியார் கல்வி அமைப்புகள் எண்டு பலத்தில் இருந்தும் பங்கு கொள்கின்றன. நல்லவேளை நான் பார்டிசிப்பன்ட் இல்லை, இல்லை வண்டவாளம் தண்டவாளம் ஏறி இருக்கும்.

வெண்ட அணியின் அம்மாக்கள் சீலைத் தலைப்பால் வாயை பொத்தி அழுவது, அப்பாக்கள் சியர் கேர்ல்ஸ் மாதிரி உற்சாகப் படுத்துவது, தங்கள் குடும்ப சோகக் கதை சொல்லி எல்லாரையும் நெகிழ வைப்பது, நடுவர்களின் பிறந்த நாளை சர்ப்ரைசா கொண்டாடுறது, வயில்ட் காடு ரவுண்டு, சிறப்பு அதிதிகளா மார்க் சுக்கர்பெர்க், லாரி சோடா மன்னிக்கவும் லாரி பேஜ் போன்றோர் வரலாம் இல்லை அவைய விடப் பெரிசா உள்ளூர் ஆட்டக்காரன் யாரவது வரலாம் (கரகாட்டக்காரன் காலத்திலிருந்து வெளியூர் ஆட்டக்காரனை உள்ளூர் ஆட்டக்காரங்கள் மதிக்குறதில்லையே).இது போன்ற ரியாலிட்டி சோக்கே-ஆன (சோக்கான) அம்சங்கள் எதிர்பார்க்கலாம். (கவிதைக்கு பொய் அழகு)

(ஆமா டிடி வருவாங்களா? சிவகார்த்திகேயன் மாதிரி ஒராள் நடத்த வருது எண்டு சொல்லறாங்களே சயந்தன் உண்மையா ?)  

எது எப்பிடியோ நடுவர்களுக்குள்ளும், பங்குபற்றுபவர்களுக்கும் நடுவர்களுக்கும் இடையிலும் சூடான வாக்கு வாதம் guaranteed! 

கொம்புயூட்டர் போட்டியா? எங்களுக்கு ஒரு இழவும் விளங்காது, போற வயசில, இருக்குற பிரச்னைக்குள்ளையும், வேற வேலை இல்லை எண்டுறவைக்கு,
          ஏதோ கர்நாடக சங்கீதம், சுருதி , இராகம் விளங்கியே பாட்டுக் கேக்குரனியள்? போய்ப் பாருங்கோ விளங்கலாம் இல்லாட்டியும் பரவாயில்லை. சங்கட சதுர்த்திக்கு பிள்ளையார் கோவிலுக்கு சுண்டல் கிடைக்கும், சுரண்டல் குறையும் எண்டே போறனியள் - நம்பிக்கை, அது மாதிரி சும்மா போய்ப் பாருங்கோ.

இனி- பாகம் இரண்டு: காடு திறந்து கிடக்கின்றது.

பி.கு: நண்பர்களே, சும்மா உடான்ஸ் அடிப்பதோடு என் பணி நின்று விடுகிறது - ஆனால் இந்த நிகழ்வுக்காய் சயந்தன், பாலா,  சர்வேஸ் எண்டு ஒரு சிறிய அணி அநியாயத்துக்கு  உழைச்சிருக்கு, ஆதலால் இந்த போஸ்டுக்கு லைக் பண்ணுறது, பின்னூட்டம், ஊக்கசத்து எல்லாம் விட்டுட்டு;   அவைக்கு தேடித் பிடித்து ஒரு வாழ்த்து சொல்லுங்கோ - புண்ணியமாப் போகும். அவைய இங்க பிடிக்கலாம் : https://www.facebook.com/groups/264218806991707/.

சனி, நவம்பர் 05, 2011

கனவில் வந்த கவுண்டமணி


டேய் தேங்காய் தலையா எழும்படா டேய்... பாருங்க மகா ஜனங்களே இரவிரவா facebook இல பம்பலடிச்சிட்டு எதோ ரிசேர்ச் பேப்பர் படிச்ச மாதிரி நித்திரை கொள்ளுறன் - டேய் எழும்படா டேய். 

வெளியில நாப்பது டிகிரி பெரநைட்டு, இன்னும் மத்தியான பன்னிரண்டு ஆகேல்லை - போத்திண்டு படுங்க...

மவனே நீ இப்படி சொன்ன எழும்ப மாட்டாய், உனக்கு வேற இருக்கடி... உண்ட பூசை முகம் அட சீ ஆசை முகம் மறந்துபோன நோட்டுக்கு யாரோ கொமென்ட் போட்டிருக்கிரானுக டேய் எலும்பு எழும்பு...

அரக்கப் பரக்க எழும்பி யாரு எண்டு பாத்தா... கவுண்ட மணி... என்ன அண்ணை நீங்களே தானா...

எண்டா உண்ட்ட ரேஞ்சுக்கு பின்ன கொண்டை போட்ட ராய் - கொண்டலிசா ராயா வருவாங்க.. நானே நானேதான்.....   

அண்ணை யாரண்ணை கொமென்ட் போட்டது...அதே பழைய வெட்டி குரூப்பா ? இல்லை புதுசா யாரும் புள்ளைங்க ?

எண்டா டகால்டி மண்டையா... உனக்கே இது நியாயமாடா ? முகம் மறந்து போச்சு மூக்கு மறந்து போச்சு எண்டு நீ விடுற பீலாவுக்கு இந்தெல்லாம் ரொம்ப ஓவர்தான்... மறதி எண்டா வல்லாரை சாப்பிடு யோகா பண்ணு அதை விட்டுட்டு மறந்து போயிட்டனண்டு reminder க்கு ஒரு நோட்டா...

ஒரு விளம்பரம்தான்....கலைக்கு ஒரு விளம்பரம் முக்கியம் அண்ணை ...

டேய் உன்னை எல்லாம் கலைஞன் எண்டு யாரடா சொன்னது... நீயே அறிவிச்சுடுறதா.... அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும் ராஜா... பொழுது போக்கா எழுதிற நீயும் பொழுது புலர எழுதிற அவைகளும் ஒண்டா... அடேய் நூடில்சு, கழுதைக்கும் நாலு காலு யானைக்கும் நாலு காலு ரெண்டும் ஒண்டா... status update இலையே நீ சிலப்பதிகாரம் எழுதலாம் எண்டு நினைக்கிறாய்... கலைஞன் எண்டா மக்கள் ரசிக்கோணும்....

அண்ணை சும்மா தெரியாம பேசாதீங்க... என்ட நோட்டுகளையும் நாலு பேர் லைக் பண்ணுனம்...

ஆமா பண்ணுனம்.... எதுக்கு நீ குடுக்குற ரோதனயில.... நோட்டை எழுதினாமா publish பண்ணினாமா எண்டு விடுறியா.. இல்லையே....நீ இருக்கிற குறுப்பில எல்லாம் ஷேர் பண்ணுறது... அதுவும் வொர்க் அவுட் ஆகேலேண்டா டாக் பண்ணி விடுறாய்... மவனே அதோட விட்டியா... பிரைவட் massege இல அனுப்பிறாய்... அதையும் கவனிக்காட்டி... மட்டவண்ட சிவரில போடுறது...  கோமென்டில கோத்து விடுறது... உண்ட டகால்டி எல்லாம் எனக்கு தெரியும்டா டேய்....

அப்பதான் எங்கட போஸ்ட் முன்னுக்கு வரும் அண்ணை facebook la அப்பிடி ஒரு அல்கோரிதம் வைச்சிருக்கிரானுகள்....

இப்பிடித்தாண்டா தொடங்குவியல், பிறகு உண்ட போஸ்டை நீயே லைக் பண்ணுறது, உண்ட கொமெண்ட நீயே லைக் பண்ணுறது, எண்டு கடசில steve-jibs R.I.P இக்கு கூட லைக் போட்டவனுகள் தெரியுமில்லை....

அண்ணை அவனுகளையும் என்னையும் ஒன்டெண்டு சொல்லதேங்கோ....நாங்கெல்லாம் ஒரு காலத்துல பெரிய விவாதிகள்.... எங்களுக்கெண்டு ஒரு followers இருக்கினம்...

வியாதிண்டு சொல்லு ஒத்துக்கிறன்... ஈரப்பிலாக்காய் தலையா, டிபேட் பண்ணினா ஏ.ல். பாஸ் பண்ணலாம் எண்டு சொன்னவன் தானே நீ... தமிழ் வளக்கவோ இல்லை தலைமைத்துவம் வழக்கவோ டிபேட் பண்ணி இருப்பை எண்டு பாத்தா, சிமிக்கியப் பாத்திண்டு இருந்திருக்கிறாய்... இதுக்கு உனக்கு followers வேறயா ... யார்ரா அந்த கொத்து ரொட்டி மண்டயன் தங்கட காலத்தில சில பெண் விவாத அணிகள்தான் இருந்துது எண்டு கவலைப் படுறான் உண்ட follower ஆத்தானிருக்கும்... எண்டா டீ இல சுகர் இல்லை என்ட மாதிரி டிபேட் இல figure இல்லை எண்டு கவலைப்படுறான்....  டிபேட் இல fire இல்லை எண்டு கவலைப்படாமல்.... 

அண்ணை அரசியலில இதெல்லாம் சகஜமண்ணை....

டேய் என்ட டயலாக் எனக்கேவா... ஒரு பைல் மட்டை, நாலு பென்சில் மாதிரி இருக்கிற உனக்கே அரசியலா, டேய் உடம்பு தாங்காதுடா..... அடேய் வாழ்க்கையின்னா ஒரு என்டர்டெயின்மென்ட், என்கேஜ்மென்ட், ஒய்ல்மென்ட் இதெல்லாம் தேவைதான் ஆனா உனக்கு கவர்னமென்ட் ரேஞ்சுக்கு ஓவர் பில்ட் அப்பா இருக்கே.... அது செரி அந்த ஆசை முகம் உண்மையா இல்லை உட்டாலக்கடியா ?

ஹிஹி... அது கம்பனி சீக்கிறட் வெளியில சொல்லப் படாது....

டேய் பெரிய மைக்ரோ சாப்ட்டு...இந்த டகால்டி எல்லாம் வேணாம் பம்மாம சொல்லு...யாரந்த காந்தக் கண்ணழகி?

முழுசா பொய் எண்டு சொல்லேலாது... ஆனா உண்மையில்லை...

ஏண்டா நீ திருந்தவே மாட்டியா ? அது செரி உலகத்திலேயே கேள்வி கேக்கிறத்துக்கு மனுவல் போட்ட கேப்பமாரி நீ தானே...ஒவொரு பகுதியா - காது, கை கால், கண் எண்டு கடைசியா முகத்துக்கு வருவாயில்லைஅப்ப இருக்குடி உனக்கு ஆப்பு...
டேய் இப்ப நாங்கள் கதைச்சதைக் கூட நீ போஸ்ட் பண்ணுவாய் எண்டு தெரியும் ஆனா மவனே உள்ளதை உள்ள படியே போடவேணும்.. ஏதாவது மாத்தி இருந்தாய் குழாயை வச்சு குடாஞ்சிடுவன்.....அப்படியே இதையும் சொல்லிடு 

மகா ஜனங்களே நோட்ட வாசிச்சா
சும்மா skip பண்ண நினைக்கிறவை லைக் பண்ணுங்கோ,
லைக் பண்ண நினைக்கிறவை share பண்ணுங்கோ ,
ஷேர் பண்ண நினைக்கிறவை ஒரு கோமண்ட போடுங்கோ... அப்பத்தான் கலை வளரும் 


the notes mentioned in this post are:
ஆசை முகம் மறந்து போச்சே....I: 
ஆசை முகம் மறந்து போச்சே....II: 
என்னிடம் கேட்கக்கூடாத கேள்விகள்....: 

திங்கள், அக்டோபர் 24, 2011

என்னிடம் கேட்கக்கூடாத கேள்விகள்....



இந்த பீல்டில் ஸ்கோப் இருக்கா ?
அடிங் மவனே நான் என்ன சோசியக்காரனா ? நல்ல லென்சு போட்டு பாரு ஸ்கோப் கிடைச்சாலும் கிடக்கும் (இந்தக் கேள்வி கேட்ட பிறகு உன்னில இருந்த ஸ்கோப் போயுட்டுது)
எப்ப முடியுது ?
கலியாணத்தில இருந்து கல்லூரி, கக்கூசு வரைக்கும் இதே கேள்விதான், அடப் போங்க போஸ் போரடிக்குது...
நாயகன் பாணியில், அவனுகளை முடிக்க சொல்லு நான் முடிக்கிறான்....

நூறு எப்பிசோடு அப்புறம் ரீகப் அப்புறம் மறுபடியும் நூறு எப்பி சோடு மவனே மெகா சீரியல் எடுக்குறவன் முடிக்கட்டும் நான் முடிக்கிறான்.

செமி பைனல் அப்புறம் வைல்ட் கார்ட் அப்புறம் பிரீ பைனல் அப்புறம் மெகா பைனல் இந்த ரியாலிட்டி ஷோ பன்னுரனுவகளை நிறுத்த சொல்லு நான் நிருத்திறன்.

இப்ப ஐ.டி பீல்ட் பிக் அப் ஆயிட்டுதா ?

இதென்ன ஸ்கூட்டரா ? அட போங்க போஸ், நான் என்ன ஒபமாக்கே தெரியாது...
என்னதுல ரீ - சர்ச் பண்ணுற ?
ஆங்க, மண்ணாங்கட்டில.... ஏன் வெந்த புண்ணில வேல் பாச்சுறீங்க ?
do read{
    அண்ணே இது புல் அண்ணே , (பாதி பிசிட்டு) இது half அண்ணை...
   மறுபடி இது புல் அண்ணே , (பாதி பிசிட்டு) இது half அண்ணை...
}while (உருப்படியா கேள்வி கேக்கும் வரை);
முடிச்சுட்டு என்ன பிளான் ?
நாலு எருமை மாடு வேண்டி அமெரிக்கன் பூட் போல் கோச் பண்ணலாம் எண்டு இருக்கிறன் அசிஸ்டன்டுக்கு ஆள் தேவை வருரியளா ?
முடிச்சுட்டு எங்க ?
நான் ஊருக்கு எண்டுவன், ஏன் இங்கே இருக்கலாமே நல்ல ஒப்பசுனிட்டி, அங்க லைப் சேவ் இல்லை , விலை ஏறிட்டுது எண்டு ஒரு லெக்சர் அடிக்கவே , அட அதே மாவு , வேறை ட்ரை பண்ணுங்க போஸ்... அதுசரி நாம எதோ ஜேசன் பௌர்ன் எங்க போட்டோ வை கயில வச்சிண்டு ஆளாளுக்கு அலையுரானுகள் சுடுறதுக்கு... அங்க கத்தரிக்காய் விலை ஏறினா இங்கை புரோக்கிலி விலை ஏறுது...
அங்க என்னத்துக்கு போறாய் ?
ஒரு கிளிஞ்ச உள்ளாடை விட்டுட்டு வந்துட்டான் , அதான் எடுத்துட்டு வரலாம் எண்டு...

மாடு செத்தா மனுசன் தின்னான் தோலை உரிச்சு மேளம் கட்டி
அடிடா அடிடா நாக்கு மூக்கா நாக்கு மூக்கா நாக்கு மூக்கா நாக்கு மூக்கா.....