வெள்ளி, டிசம்பர் 15, 2017

கனவு


மச்சி
சொல்லுடா
நேற்று ஒரு செம்ம சீனு மச்சி
சீனா ?
இரவு ஒரு பத்து பதினொன்று இருக்கும்.
ம்ம்ம்
நிலவு, முழு நிலவில்லை, டிம்மா மங்கியமாதிரி ஒரு மாதிரி ரொமான்டிக்கா!!!
ரொமான்டிக்கா....?
அவள் வந்தாள்டா 
அவளா ?
ஓம் அவளேதான். வயசு பதினாறு இருக்கும் செரியா சொல்ல தெரியேல்ல. சம்திங் லைக் தட்.
பதினாறு வயசா ? மைனர் காதலா ?
இல்லைடா ஆனா இளவயசு மச்சி
ஓகே....
முகம் brightaa அப்பிடியே 1000 வாட் பல்ப் இல்லை அது சுடும் ஒரு நிலவு மாதிரி குளிர்மையான ஒரு ஒளி அழகுடா, சும்மா நிலவு எண்டா தேய்ந்து வளரும், இது பொங்கி வரும்  ஒளி, நிலவு ஒளி, பெரிய சைஸ் நிலவு ஒளி மாதிரி முகம்.
confusion of the institution
அவள் சிரிச்சாடா மச்சி 
சிரிச்சிட்டாளா - அப்பா அவளவுதான்.
அவ சிரிச்சா அது கூட ஒரு புதுமையான நிலவுடா 
இந்த நிலவ விட்ட வாயேண்டா
அது அவளை
அவளை
அவளை அப்படியே கை கூப்பி கும்பிடலாம் 
கும்.. கும்பிட.... கும்பிடலாம்....medical miracle
ஓமடா தெய்வீக சிரிப்பு
சுமார் ஒரு மின்னல் மாதிரி வந்தாளடா 
வாம்மா மின்னலு - நீ சொல்லு
நான் எழுந்து உக்காந்தன்
நீ ரொம்ப லேட்டுடா
அவள் சொன்னாள்
சொல்லிட்டாளா.....
ம்ம்ம் சொன்னாள் - தன்னை பாரெண்டு.
அடி ரா,அடிரா,அடிரா.....
அவள் அழகெனும் தெய்வமடா 
மறுபடியுமா.... ஆளை விடுடா சாமி!!!


மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்,
வயதுபதி னாறியிருக்கும் இளவயது மங்கை,
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்,
துங்கமணி மின்போலும் வடிவந்தாள் வந்து,
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ!
அடடா அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன். (1)


Read more at: https://tamil.oneindia.com/art-culture/essays/2000/bharathi-231100.html