திங்கள், அக்டோபர் 31, 2011

எயார் டெல் சுப்பர் சிங்கர் 4 உம் ஏகாதிபத்திய பங்குதாரர்களும் ....


உயிரினங்களும் சூழலும் சேர்ந்த எல்லாம் ஆன இந்த இயற்கை தன்னை தானே மாற்றிக்கொண்டு நகர்கிறது. இதை கூர்ப்பு என்று சொல்கிறார்கள். இந்த கூர்ப்பு நான், நீங்கள், நாய், வடை, பிள்ளையார் கோவில் மோதகம், பண்டா குளிர்பானம், அரசடி அரட்டை,  facebook. http protocol என்று எல்லாத்திலையும் அவதானிக்கலாம். இந்த மாற்றத்தை ஒரு படிப்படியான நகர்வாக நோக்க முடியும். ஒரு நிலையில் இருந்து மற்ற நிலைக்கு நகர்வதை 'தெரிவு' என்கிறார்கள். யார் தெரிவு செய்கிறார்கள் , எந்த முறையில் தெரிவு செய்கிறார்கள், யார் இதை கண்காணிக்கிறார்கள் / ஒழுங்கு படுத்துகிறார்கள்.

இது ஒரு சிக்கலான அமைப்பு என்றாலும், எல்லாருக்கும் தெரிந்த அமைப்புதான். எயார் டெல் சுப்பர் சிங்கர் 4 இல் இறுதிப் போட்டி தெரிவும் இந்த வகையினதுதான். கடந்த கொழும்பு மாநகரில் ஐ.தே.கா தெரிவு செய்யப்பட்டதும் இப்படித்தான்.  ஒபாமா கூட தெரிவு தான் செய்யப்பட்டார். 

பயன்பாட்டில் மூன்று வகை தெரிவு அமைப்புகளை காணலாம் ,
  1. தேர்தல் - பெரும்பான்மை அபிப்பிராயம் 
  2. நியமிக்கப்பட்ட நடுவர் ஆயமும் போட்டியும் - வல்லுநர் அபிப்பிராயம் 
  3. பரீட்சை 
உலகெங்கிலும் உள்ள எல்லா மனித உருவாக்கங்களிலும் இருக்கிற மாதிரி மேற்சொன்ன தெரிவமைப்புகளும் ஆயிரத்தொன்பது சட்ட சிக்கல் கொண்டதுதான் - புதுசா ஒரு அமைப்பை சிந்திப்பதில் இலபமில்லை - தெரியாத கடாபியை விட தெரிந்த ராஜ பக்ஸ மேல் எனண்டதுதான் வியாக்கியானம். பொதுவா மனுவல் வாசிக்காம மருந்து சாப்பிடுறதும் மனுவல் வாசிக்காம ஏலெற்றிக்கல் சாமான்களை பாவிக்கிறதும் பழக்கமாகிட்டதால (முனுசாமி சொன்னது: அந்த கோதாரியை எவன் வாசிப்பான்- சும்மாவே இங்கிலீசு விளங்காது இதல பூதக்கண்ணாடி வச்சுத்தான் அதை வாசிக்க வேணும்) இந்த மாதிரி தெரிவு அமைப்புகளையும் அப்பிடியே எழுந்த மானத்தில பாவிச்சு பழகிட்டம். (கவுண்டமணி - டேய் கோமுட்டி தலைய பிரிண்ட் பண்ணி பெட்டிக்க வந்தாலே வாசிக்க மாட்டம்... இதல இதுக்கேல்லாம மனுவல் வாசிப்பம்.. நாங்கெல்லாம் யாரு.... )

பரீட்சை தெரிவு நாங்களெல்லாம் கடந்துவந்த கால்வாய் தான், நிறைய துன்பியல் நினைவுகளை கொண்டதுதான்.  படிச்சதை கேட்டா அதிர்ஷ்டம், படிச்சது நினைவிருந்தா சுக்கிர திசை, எழுதினதே சரி எண்டா சனிதா வாசனாவ - நீதான் முதலாம் பிள்ளை. பிட் அடிக்கிறதிலை எனக்கு அனுபவமில்லை ஆன எக்ஸாம் சென்டர்ல ஐங்கரன்ட கொஞ்சம் கேட்டேளுதின நினைவுண்டு - கீரிமலை தேவியின் பெயர் - சமய பாடம். மற்ற படி முன்னால இருக்கிற முனுசாமி பேப்பர் பாத்து நினைவுக்கு வந்த சில பதில்களை அதே முனுசாமி பேப்பர் பாத்து குழம்பினதில களிச்சிடலாம். (என்னைப் பார்த்து குழம்பின முனுசாமி - ரதீசனும் மடக்கையும் கதை தெரியாதவைக்கு தனியா சொல்லுறன் , இப்ப அது மட்டர் இல்லை) 

வைரமுத்து சிற்பிகளை செதுக்கு முயலும் போது (சிற்பியே உன்னை செதுக்குகிறேன் புத்தகத்தில்) எக்ஸாம் பற்றி ஒரு மனுவல் போட்டிருக்கிறார்... காதல் பற்றிக் கூட அதே புத்தகத்தில் மனுவல் உண்டு. அதில முக்கியமான பொயின்ட் என்னெண்டா
"மாணவரே இந்தக் கல்வி முறையில் தேர்வுதான் உன் அறிவைக்காட்டும் அடையாளம் என்றால் அதிலிருந்து நீ அங்குலமும் பின்வாங்காதே தேர்வு என்பது தேசிங்குராஜன் குதிரை. அதை நீ அடக்கி விட்டால் அது உனக்குப் பொதி சுமக்கும் கழுதை "
  1. வேற வழியில்லை எக்ஸாம் எல்லாரும் எழுதியே ஆகவேணும் 
  2. எக்சாமை பாஸ் பண்ணிட்டு அதை விமர்சனம் பண்ண விளை
  3. எக்ஸ்சாம் பாஸ் பண்ணுறது சுலபம் பகுத்தலும் தொகுத்தலும் தான் டிரிக் இது எந்தப் பாடத்திற்கும் பொருந்தும்
ஒரு முழுமைக்காக இதைத் தொட்டாலும் எக்ஸ்சாம் பற்றின எக்ஸ்சாமினேசன் போதும் எண்டு நினைக்கிறன். 

நியமிக்கப்பட்ட நடுவர் ஆயமும் போட்டியும் - வல்லுநர் அபிப்பிராயம் 
பெரும்பாலான துணைப் பாட விதான மட்டர்கள் இப்படித்தான் அசெஸ் பன்னுறவை. நடுவர் எண்டு ஒருத்தரை கொண்டந்திருத்தீட்ட வேற வழியில்லை அவர் என்ன சொன்னாலும் கேட்டுத்தான் ஆக வேணும். பாவம் அவரும் மனுஷன் தானே.ரெண்டு சக்கை பெர்போர்மன்சில எது பெட்டர் எண்டு சொல்ல வல்லுநர் தேவை ரெண்டு சப்பை பெர்போர்மன்சில எது பெட்டர் எண்டு சொல்லவும் வல்லுநர் தேவை (வல்லுனர் ரொம்பப் பாவம்). ஆனா ஒரு சக்கை பெர்போர்மன்சும் ஒரு சப்பை பெர்போர்மன்சும் எண்டா அது ஈஸி.

உதாரணமா, விக்ரமா சூர்யாவா யாரு நல்ல நடிகர் எண்டா அது கொஞ்சம் சிக்கல் தான் - சப்ஜெக்டிவ் அபிப்பிராயம். (எவண்டா அவன் கருணாநிதி எண்டது ..என்னது அவர் ஒரு பெருங் கலைஞரா.. நான் இந்த ஆட்டத்திற்கு வரலை )
விக்ரமா saam andersana எண்டால் ஈஸி ......சாம் அண்டர்சனா power star Dr. Srinivasan ஆ எண்டல் அது மண்டை காயுற விஷயம் திரும்பவும் தனிப்பட்ட அபிப்பிராயத்துக்கு தள்ளப்படும்.

இதில இந்த வல்லுனர்கள் ஒரு scheme வைச்சு மார்க்ஸ் போட்டா என்ன ஆகும் ? scheme ல அடங்காத விடயங்களை அசெஸ் பண்ணுறதா வேணாமா. ஒரு லெவலுக்கு மேல அந்த வல்லுனரின் சொந்த அபிப்பிராயங்கள் தெரிவில செல்வாக்கு செலுத்தும்.

இதில வல்லுனர் தெரிவும் புள்ளியிடும் முறைமையும் (scheme) முக்கியம். புள்ளியிடும் முறைமை போட்டி நடத்துறவை தங்கட அறிவு + அனுபவம் கொண்டு அமைக்கிறது. ஆனா வல்லுனர் தெரிவு மிக முக்கியமானதொன்று ஒரு நல்ல பேச்சாளர் கட்டாயம் ஒரு நல்ல பேச்சுப்போட்டி நடுவர் எண்டு சொல்ல முடியாது இதான் மறுதலையும் எப்போதும் உண்மையல்ல. என்னதான் நல்ல நடுவர் சொன்ன தாயிருந்தாலும் அந்தத் தீர்ப்பிலையும் குற்றம் கண்டு பிடிக்கலாம்.

ஒரு சராசரி கிரிக்கெட் செலேக்டர் பெர்பெக்ட் ஓவ் டிரைவ் அடிக்கிற மகிலவை செலக்ட் பண்ணிடுவார் ஆன ஜெயசூரியாவை ஒரு நல்ல பட்ஸ்மன் என்டறிய வாட் மோர் மாதிரி what more எண்டு out of the box தின்க் பண்ண வேணும்.

ஒரு போட்டியை சுவாரசியப் படுத்திர விசயமே அதில இருக்கிற random influence தான். அதே random influence தான் தான் அதன் முடிவுகளிலை விமர்சனங்களை உருவாக்குது. நிற்க தேர்தல் முறைமை இதெல்லாத்திலும் பெரிய பகிடி. அது பற்றி நேரம் இருந்தா பிறகொருக்கா...

அதுவரை - ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக