
ஒரு பூகம்பத்தை தாங்கிய
பொறுமை
ஒரு தலைமுறையையே
தாங்கிய வலிமையை,
தாங்கிய தாய்மை
பல அரியணைகளை அசைத்துப் பார்த்த
ஆளுமையை
ஆதரித்த அம்மா
உனக்கு
மருந்துக்கு கூட
ஆசனம் தராத அண்ணா
வந்தாரை எல்லாம் வரவேற்றாராம்
"போடா!
பருந்துக்கு கூட பயப்படாது
எங்களூர் கோழிக்குஞ்சு" - என்று விட்டாய்.
பாசமறுப்பதால் தான் அது
பாசக்கயிறு - அதுக்கும்
பாசம் வந்திருக்கும்
உன்னை தீண்டிய போது .
சிவப்பும் மஞ்சளுமாய்
எனக்கொரு கனவிருக்கு
பச்சை வயல் பரப்புகளில்
வெள்ளை மனங்களோடு ......
அந்தக் கனவை வென்ற பிறகு
கதறும் வரை ,
கட்டி வைத்திருக்கிறேன் - என்
கண்ணீருக்கு அணை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக