தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 09, 2013

நீக்கமற…

நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்ட
பள்ளிப்பருவத்து நண்பன் ஒருவனை
ஆரத் தழுவ முடியவில்லை
நெஞ்சில் நெருடுகிறது ஒரு பல்லுக்காயம்

நண்பரோடு கூடைப்பந்து
ஆடிக் களைக்கலாம் எண்டால்
ஓடி வழியும் வியர்வை
நகங்களின் கூர்மை சொல்லிச் செல்கிறது

சமூக அநீதி கண்டால் கோபம் ?
ஊகும், தள்ளிப் போகிறது
மிருதுவானவற்றோடு சேர்ந்து
நானும் மிருதுவாகிப் போனேன் போலும்.
செங்கொடி மேடைகளில்
உறுத்துப் பேச முடியாதபடி
உதடுகள் கடிபட்டுப் போய் இருக்கின்றன


நண்பர்களுடனான அதீத அரட்டை
ஆடிக்கொண்டிருக்கும் உந்தன் முத்துச்சிமிக்கியை
நினைவுக்கு கொணர்கிறது

சற்றே தாமதமாகும் அலுவலக கூட்டங்கள்
ஆவி பறந்து ஆறிப்போய்க் கொண்டிருக்கும்
ஒரு குவளை தேநீரையும்
இரு குவளைக் கண்களையும்
படம் காட்டுகின்றன

ஆடி அசைகின்ற உந்தன் பின்னல்
ஆக்சிலேற்றரோடு எந்தன் கால்களை - ஒரு
ஆசுவாச உடன்பாட்டிற்கு சம்மதிக்க வைத்திருக்கிறது

எந்தன் பருவத்தில் கொண்ட கோலமெல்லாம்
உந்தன் புருவத்தின் மையில் கரைந்து போகின்றன

அகந்தை அகற்றிய ஆத்மாவை
பரமாத்மா ஆட்கொள்ளல் போல
நான் இழந்த நிற்கும் (எந்தன்) மிச்சத்தை
நீயே முழுதும் ஆட்கொண்டிருக்குறாய்.

அடையாளம் தொலைத்த இந்த நிலையை - எல்லாரும்
அடையாளப்படுத்திக் கேலி சொல்கின்றார்
பின்னூட்டங்-களையும் விருப்பு-களையும்
தாண்டிய ஒரு வாசிப்புக்காகவே
இப்போதெல்லாம் எழுத முயல்கிறேன்

குனிந்த மர நிழலும் குனித்த புருவமும் - கண்ட பிறகு
குதிரைகளின் கனைப்பும்
நரிகளின் ஊளையும் ஒன்றே.

இதற்க்கு முன்னான என்னை
எங்கு தேடினாலும்
நீயே நிறைந்திருக்குறாய் எங்கும்

அந்த பள்ளிக்கூட ஹொக்கி அணியின் நிழல் படத்தில்
பின் வரிசையில் நடுவில் நிற்கும் இளைஞனுக்கும்
எனக்குமான வித்தியாசம் மகிழ்வையே தருகிறது
இதற்க்கு முன்னான என்னை
எங்கு தேடினாலும்
நீயே நிறைந்திருக்குறாய் எங்கும்,
நீக்கமற!

---------------------------------------------------------------------------------
இதை நான் அந்த சம்பவத்து மொன்னமே எழுதினான் எண்டு சொன்னா நம்பவா போறீங்க ?
---------------------------------------------------------------------------------

வியாழன், பிப்ரவரி 16, 2012

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....

அன்புள்ள அம்மா அறிவது,

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....
நான் ஒரே சூடில் சுருண்டு விடுகிறேன்,
அது சொல்லானாலும் செரி
பொறியானாலும் செரி.

ஒரு புரியா மனத்துயரில்
துவண்டு கிடக்கும் தருணத்தில்;
வார்த்தைகளில் இருக்கும் பொறுப்பு குறைந்து, தடித்து;
அறியாக் கோபம் பொங்க... பொங்க...
இதை எழுத முயல்கிறேன்.

அப்பாவின் அடிக்குப் பிறகு கேவுகிற போது...
அண்ணாவுடனான சண்டைக்குப் பின் மூலைக்குள் முடங்கும் போது...
என் தோல்வியடைந்த அரங்கேற்றங்களுக்குப் பின்......
அப்போதெல்லாம் நீ அரவணைத்து கூட வியப்பில்லை....

நான் சொல்லாத
பகிராத
துயரங்களையும்
கண்டு தலை வருடுகிறது உன் கைகள்;
ஏன்.. என்ன... என்றில்லா தொந்தரவற்ற மௌனம்....
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....

கனத்த இதயத்தோடு
விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி இருக்கையில் தோன்றியது
"நாங்கள் பள்ளி போன பிறகு நீ என்ன செய்து கொண்டிருந்தாய் ?"
சமையலா.... பகல் முழுவதுமா....
மாதம் ஒருமுறை கல்கி...
எப்போவாவது ரமணிச்சந்திரன்.....
மீதி நேரம் ?

நீ அயர்ச்சி காட்டி சிடு சிடுத்து பார்த்தது குறைவு....
உனக்கு கோபமே வராது எண்டு சொல்லவில்லை
ஆனால் அதன் வீச்சும் நீட்சியும் குறைவே...

எங்கள் காயங்களுக்கெல்லாம் உன்னிடம் தான் வருகிறோம்
உன் காயங்களை யார் தடவி விடுவார் ? -
இது வரை இப்படி கேட்க்க தோன்றவில்லை....
அப்பாவுடனான சண்டைக்குப் பிறகு
உன் முகத்தில் வாட்டம் இருந்திருக்கலாம் - எனக்குப் பட்டதில்லை
உன் தலை இந்தப் பிஞ்சுக் கரங்களின் தடவலுக்காய் ஏங்கி இருக்கலாம் - எனக்கு தோன்றவில்லை

அன்று ஒருநாள் கொஞ்சம் பாதியில் பள்ளி விட,
விளையாடிவிட்டு கொஞ்சம் வேளைக்கு வந்திருந்தேன்;
உள்ளே சமையலறையில் கேட்ட அழுகை
உன்னுடயதா என்று பார்க்கும் திராணி இல்லை.

களத்து மேட்டில் வாளில்லா வீரன்
இந்த நகுலனின் கவிதை கூட ஏனோ உன்னை எனக்கு அறிவுறுத்துகிறது....

களத்துமேட்டில் 
வாளுருவி 
மீசைதிருகி 
நிற்கிறான் ஒரு மாவீரன் 
போகும் பறவைகளனைத்தும் 
அவன் தலை மீது 
மீசை திருகிய மாவீரன்
எச்சமிட்டன 
அவன் மீசையை 
எறும்புக்கூட்டங்கள் 
அரித்தன 
ஆனால் அவன் முகத்திலோ 
ஒரு மகா சாவதானம்.

இது ஒரு 
சிலையின் சோகமாயிருக்கலாம்....
இல்லை 
கலையின்  சோகமென்றும் 
சிலர் வாதிடலாம்...
முன்னிற்கும் 'தலை'யின் தாற்பரியம் 
எண்டும் பார்க்கலாம்...
ஆனால்த் தாயே 
உன் நிலையின் நிஜம் 
என்றே எனக்கு தோன்றுகிறது....

மற்றபடி, கால் நோ இப்ப எப்படி ? விரைந்து திரும்பி வந்து விடுகிறேன்.... 
முடிந்தால் எனக்கு கொஞ்சம் முட்டை மா செய்து அனுப்புங்கோ.

இப்படிக்கு,
இ.த.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மாவைப்பற்றி நான் ரசித்த பதிவிது: http://www.padalay.com/2012/02/blog-post_05.html

வியாழன், ஜனவரி 12, 2012

இந்து இளைஞருக்கு அறிவுரை இயம்ப வந்தனர் பெரியோர் இவ்வையகம்: காரைக்கால் அம்மையார்

இந்து வித்தியா விருத்திசபையின் 50 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சரஸ்வதி மண்டபத்தில் பிரசாந்தன் அண்ணா தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் பாடியது. கொஞ்சம் கவிதை மாதிரி இருக்கும். நண்பன் வருணுக்கு வாய்ப்பை கோர்த்ததுக்கு நன்றி.

மாமா வந்திருக்கிறார்
பிள்ளை கொஞ்சம்
baba blackship பாடு
எண்ட மாதிரி,

எனை வளர்த்த இந்துக்கல்லூரி
அதை
கண்டு செய்த
வித்தியா விருத்தி சபையே
சந்தம் கொஞ்சம் செரிய வராட்டியும்
மழலை என்று
கையை பலமா தட்டும்.
வணக்கம் பல.

அரங்கத் தலைவ,
உன் உவமைகளை கொண்டு
கவிதைகளை படைக்கும்
கடனாளிக் கவிஞ்ஞன் நான்.

எம் கவிதைகளை கூட
ஒரு உவமைகள் அடக்கிவிடும்
கவிராயர் நீர்.

இந்தக் கவிக் குபேரர்களுக்கு மத்தியில்
குசேலன் நான்,
அவல்தான் கொணர முடிந்தது.

சபையே!
தலையே!
பரந்தாமனாய் இருந்து
பராபரி.

கவிராயரே,
காகுத்தன் மேடை கருத்தரங்குகளில்
நீர் அக நானூறு விரித்த வகை கண்டு
கிறங்கி கிறங்கி காதலிப்பதாக
வீசாப் பிள்ளையாருக்கு
சத்தியம் செய்திருக்கிறேன்.
நீர் அதற்க்கு காப்பு!

புது மணப்பெண்ணாக
விரிந்திருந்த
நல்லூர் திருச்சபையிருந்து
எந்தன் வயசுக்கு வராத அறிவு
காதுவழி
முந்தி விரித்திருந்தது!

போகிற போக்கில்
எனைப் புணர்ந்த
ஆளுமைகள் பல
(நீர் உட்பட)

புந்தி உடைத்து
பந்தி வைக்கிறேன்
அவையோரே
இனி உம் முனிவு திறம்.
கௌரவரா ? பாண்டவரா?
உம் முனிவு திறம்!

புனிதவதி!
காரைக்கால் பெற்ற நங்கை.
கறைகளற்ற மங்கை. புனிதவதி!

தசைகளற்று போன தாயை
திசைகள் தெரியாத சேய்
உங்களுக்காக சந்திக்கிறது இனி.

தாயுமானவனின் தாயே!

மோனத்திருந்து கண் விழித்தாள் அம்மை
விதானத்திரிந்து கனி கொணர்ந்த பெண்மை.

பாலை வனமொன்றில் மழை அடித்தோய்ந்தது
ஏதோ ஒரு ஆபிரிக்க நாட்டில் அவசரமாக
சமாதான உடன்படிக்கை ஒப்பமிடப்பட்டது.
ஒரு போர் நின்று போனது - தொடங்காமலேயே.
இன்னொரு போர் முடிவுற்றது.
- மோனத்திருந்து கண் திறந்தாள் அம்மை.

இத்தனை அழகான ,
இத்தனை அடக்கமான ,
இத்தனை அமைதியான ,
பேயுருவை
கண்டதில்லை இதுவரை.
கேட்டதுமில்லை!

அன்புக்கு உரையே!
இந்து இளைஞ்ர்களுக்கு
இயம்பு,
அறிவுக்கு உரையே!

அம்மா சொன்னாள்,

அறிவு என்பது
அறிவதே!
உரைப்பதிலே
 இல்லை எனக்கு
உடன்பாடு.


உரைப்பதிலே இல்லை உனக்கு உடன்பாடு;
என்றால்
எதை சொல்லி நான் பாட என்பாட்டை.
தாயே

உரைப்பதிலே இல்லை உனக்கு உடன்பாடு;
என்றால்
எதை சொல்லி நான் பாட என்பாட்டை?
வேஸ்ட்டா எந்தன் விசிட் ?

அறிவு என்பது
அறிவதே!
மீண்டும்
அறிவுறித்தினாள்
அம்மை.

மெதுவாய் எட்டியது 
என் அறிவுக்கு 
அறிவு என்பது அறிவதே - கேள்விகளால்
அறிவு என்பது கேள்விகளால் அறிவதே!

தாயே,
உனக்காய் 
செய்ய இருக்கிறேன் ஒரு வேள்வி.
அவிப் பொருளாய் அதில் பல கேள்வி.
உன் வரத்துக்காய் காத்திருக்கிறேன் இந்தப்பாவி.

புரிந்ததுனக்கு என்று 
புன்னைகைத்தாள்.
புன்னகையால் அவள் சம்மதித்தாள்.

இனி 
- கேள்விகளால் ஒரு வேள்வி -

பேசா மடந்தையான 
பெருமடந்தாய்!
உன் வாழ்வில் 
நீ பேசியதாக 
யாரும் 
பேசியதில்லையே.

வாழ்க்கை என்ன 
வழக்காடு மன்றமா ?
தர்க்கங்களால் ஜெயிப்பதற்கு.

பேரம் பேசி 
பெற்றுக்கொள்ள 
உறவுகள் ஒன்றும்
கொசுருகள் அல்லவே!

பேசா மடந்தை
பேசியதிது.
பெயருக் கொண்ட பெருமாட்டி - 
இந்து சேய்களுக்காய் செப்பியதிது.
"வாழ்க்கை என்ன 
வழக்காடு மன்றமா ?".

முன்னறிவிப்பின்றி 
வேறு 
மணம் முடித்தானே - உன்னை 
மணம் முடித்தான்.
அப்போது கூடவா 
அமைதி காப்பாய்?

தாமதித்து வந்த தாயின் பதிலிது,
தயக்கமா... 
தயாரிப்பா...என்று தெரியவில்லை.
தாய் சொன்னாள்...

நான் இல்லறத்துக்குள் இருந்து கொண்டு 
இறையைத் தேடினேன்.
அவன் 
இறையோடே இருந்துகொண்டு 
இல்லறம் நாடினான்!

தத்தனுக்கு 
தத்தம் செய்தபோது கூட 
என் 
சித்தத்தில் சிவனே இருந்தான்.

என் உள்ளத்திருப்பது இறை 
என்றவன் ஒதுங்கிக் கொண்டான்.
உள்ளிருக்கும் இறை 
வெளியிருக்குமா என 
நான் தேடத் தொடங்கினேன்.

வார்த்தைக்குளே ஒரு 
வாழ்வை சொன்னாள் - அந்த 
வாழ்விருந்து 
எங்கள்
வாழ்க்கைக்கும் சொன்னாள்.

இளஞ்ஞர்களே!
உங்கள் சித்ததிருக்கட்டும்
ஒரு சிறப்பு
அது என்றும் மங்காதிருப்பது
உங்கள் பொறுப்பு

வாழ்வின் நடைமுறைகள் - உங்கள் மீது 
வழக்கு தொடுக்கும் 
உறவுகள் உணர்வுகளோடு 
பேரம் பேசும் 
சுற்றம் ஆசைகளை 
அளவெடுக்கும் 

உங்கள் சித்ததிருக்கட்டும்
ஒரு சிறப்பு
அது என்றும் மங்காதிருப்பது
உங்கள் பொறுப்பு

மாற்றங்களுக்கேற்ப மாறுங்கள் 
மயங்கத் தேவையில்லை.
ஆனால் என்றும் 
சித்தத்தில்
சிவனிருக்கட்டும்.
சிவனென்றால் ?
உயிர்களிடத்தில் அன்பாயிருப்பதே 
உத்தமனார் வேண்டுவது!

இளஞ்ஞர்களே!
இங்கே 
இல்லறத்துக்கு போன 
அக்கினிக்குஞ்சுகள்
பெரும்பாலும் 
ஈரலிப்பாகிவிடுகின்றன.

இல்லத்த்ரசியாவது,
இஞ்சினியராவது,
என்பதையும் தாண்டி 
உங்கள் 
இதயத்திருக்கட்டும் 
ஒரு நெருப்பு 
அது 
குடுக்கட்டும் எல்லா உயிர்க்கும் 
ஒரு இனிப்பு.

என்புக் கரங்கள்
தடவியது அன்போடு.
வேகத்தோடு எழுந்த என் சிந்தனைகளை 
தாபத்தோடு தணித்தது
தாயன்பு.

கனாக் காணும் காலத்தவனின் 
வினாக் காணல்
இன்னமும் முடியவில்லை !

அம்மம்மாக்கள் கூட 
அலங்கரிப்பில் ஆர்வம் காட்ட 
ஆரவாரப் படாமல் 
அலங்காரம் துறந்ததேனோ ?

நானா அலங்காரம் துறந்தேன்
ஆண்டவனுக்காக 
மாலை 
அலங்காரம் செய்தாள்
ஆண்டாள் 
ஆண்டவனை 
அலங்கரிக்க 
என்பு மாலை ஆனேன் நான் 
அன்பு மழை ஆனான் அவன்.

மகனே 
அலங்காரம் பற்றி 
அகங்காரம் இன்றி சிந்தி 
சபைக்கு போக 
நகைகளை அணியலாம் 
நகைகளை காட்ட 
சபைகளை 
கூட்டாதீர்கள் !

அகங்காரம் துறந்த
அலங்காரம்,
அலங்காரம் பற்றி 
அகம் காணும் தேவை 
சேதி சொல்லியது.

சபைக்கு போக 
நகைகளை அணியலாம் 
நகைகளை காட்ட 
சபைகளை 
கூட்டாதீர்கள் !

தாயே!
ஒரு குழப்பம்!
குற்றச்சட்டல்ல...
தத்தன் கேட்டபோது 
தடங்கல் ஏன் ?
அடியவருக்கே 
அக்கனியை 
அமுது செய்ததாக சொல்லாமல் 
மறைததேனோ ?

காதல் கணவன் 
கனி  சுவைத்த ,
சுவைத்த கனி சுவையில் 
மயங்கி நிற்கையில் 
இல்லை என்று சொன்னால் - ஏமாற்றத்தின் 
எல்லைக் குப்போவானே...

வேளை சென்று 
அழுத்தத்தில் வெம்பி 
வீடு திரும்புபவன் 
கவலை - பனி 
காலை கதிரவன் போல் 
அதை கழற்றுவது என் - பணி 
தற் கொண்டான் பேணல். 

சுவை கனி என்றவுடன் 
உனக்கதில் 
தகை பங்கு தராதது 
தப்பில்லையா தாயே ?

தகை பங்கு கேக்க 
நானென்ன பங்குதாரரா ?
- பாரியாள்.

தாயிற் சிறந்த 
தயையே,
தாயென்று சொன்ன 'தயை '
சொன்னாள் 

தகை பங்கு கேக்க 
நானென்ன பங்குதாரரா ?
- பாரியாள்.

கடுமை கொண்ட வார்த்தைகள்
தகமை கொண்ட தாயிடமிருந்து - கண்டு 
பயமை கொண்டேன்.

ஒன்று 
புரிந்தது எனக்கு - என் 
அம்மா எதற்கு 
அப்பாவுக்கென்று எடுத்து வைக்கிறார் 
என்று.

அம்மாக்கள் எல்லோருமே 
அறிவுக்கப்பால் இயங்குகிறார்கள் 
என் ஆண்மை கொண்டு அறிய 
தாய்மை ஒன்றும் 
assembly language இல்லையே.

கேள்விகளாலான 
இந்த வேள்வி முடிந்தது!
தாயே ஒரு வரம் தாரும்.

என்னகத்தும்,
என்னைப்போல் பல இளைய நெஞ்சகத்தும் 
ஒரு நெருப்பு இருக்கிறது
சிவப்பும் மஞ்சளுமாய்;
இந்த நல்லாற்றம் கரை இருந்து 
எள்ளாற்றம் கரை வரையில் 
அணையாது அந்நெருப்பு
வெந்து தனிக்கட்டும் 
முட்காடுகளை.
வெள்ளாமை செய்யட்டும் 
வரும் தலைமுறை!

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

முடிவுகளோடு அலையும் மனிதர்கள்


நிறைய நேரங்களில் மனிதர்களைப் பார்க்கும் போது, பழகும் போது, பேசும் போது எனக்கு வியப்பாக இருப்பது அவர்களின் அபிப்பிராயங்கள் அதன் விளைவான முடிவுகள். சிலர் அதையும் தாண்டி தங்கள் அபிப்பிராயங்களை விற்க அல்லது திணிக்க முயல்வது. சுவாரசியமாக இருக்கும் அவர்களது வாதங்கள் நம்புவது மாதிரி சொல்லப்படும் , ஆனால் உண்மை ?

உண்மை என்பது கூட விசித்திரமானது தான். எது உண்மை ?
  1. பெரும்பான்மை மனிதர்களின் நம்பிக்கை 
  2. ஊர் சொல்வது 
  3. CNN, BBC, etc சொல்வது
  4. அறிவோர், பெரியோர், ஆன்மீகவாதிகள் சொல்வது
  5. சமயம் சொல்வது 
  6. நான் கண்டது கேட்டது விசாரித்தது
  7. நான் நம்புபவர்கள் சொன்னது 
  8. என் தலைவன் , குரு, அம்மா, அப்பா, சொல்வது 
  9. என் உள்ளுணர்வு சொல்வது 
எது உண்மை ? எனக்கு செரியாத் தெரியேல்லை , இதல ஒன்றை மறுத்து மற்றதை ஏற்க முடியுமா தெரியேல்லை....

உண்மை எதோ ஒன்றாய் இருந்துட்டு போகட்டும்.... உண்மையே ஏதேண்டு தெரியமலிருக்கேக்கை, ஒன்றை உண்மை எண்டு எப்படி தீர்மானிக்கிறார்கள்... தெரியேல்லை... எனக்கு தெரிந்து எந்த ஒரு பிரச்சனைக்கும் குறைந்த பட்சம் இரண்டு பார்வை இருக்கும், இரண்டுக்கும் ஒரு வரலாறு இருக்கும் , அந்தப் பார்வையை முன் வைப்பவர்கள், அவர்கள் அனுபவம், சூழல் என்பவை பொறுத்து அந்தப் பார்வைக்கான நியாயம் மாறுபடும். மனிதர்களைப் புரிந்துகொள்வதன் மூலம் அவர்கள் வாழ்வை தேடுதல் மூலம் ஒவ்வோர் பார்வைக்கும் காரணங்கள் காரியங்கள் கண்டறியலாம். 

துருவத் துருவ தேடத் தேட வாழ்வின் நிலைமையைக் காட்டிலும் கருத்தியலின் நிலையாமை அல்லது ஒன்றுடன் ஒன்று முரண்படும் எல்லாக்கருத்துகளினதும் நியாயத்தையும் நோக்கி நான் நகர்வது எனக்கு கவலை தருகிறது. உள்ளீடற்ற ஒரு கொள்கைக்கு அல்லது பச்சோந்தித்தனமான கொள்கைக்கு தள்ளப்படுவது ஒரு பெருங்குளப்பத்தை தருகின்றது. எதை உண்மை என்று எடுக்க, எதை பொய் என்று முரண்பட, எல்லாத்தையும் அங்கீகரிக்கவா, அல்லது எல்லாவற்றையும் மறுத்துவிடவா, பேசமா இமயமலை எறிடலாமா ரஜனிய மீட் பண்ணலாம்... குளிரிமே, தவம் செய்யலாமா பதில் கிடைக்குமோ ?...., அடப் போங்கப்பா பருப்புக்கு இன்னும் கொஞ்சம் உப்பு போடலாம வேணாமா ... அதே செரியாத் தெரியேல்லை ... மண்டை காயுது ...

வெள்ளி, நவம்பர் 19, 2010

மாணிக்கவாசகர், ஆண்டாள் மற்றும் குணா II

மாணிக்கவாசகர்.............. ஆண்டாள்.................... குணா............. 

உலகெங்கிலும் உள்ள கோடானகோடி ரசிகப்பெருமக்களின் வேண்டுகோளுக்கிணங்க நிறைவுப் பாகத்தை எழுதுகிறேன்... (சும்மா மன்னிச்சு விட்டுடுங்க..)

 (இந்தப் பகுதியை முதல் பகுதியின் தொடர்ச்சியாக வாசிக்கவும் இது அடுத்த பகுதி அல்ல, அடுத்த பக்கம் )

தேவியை கண்ட குணாவின் பரவசம்...துள்ளல் ...ஏலவே சொல்லப்பட்டது...
அந்த துள்ளலுக்கு முன் பக்தனின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும் போது எல்லோரும் போல ராஜா கி போர்டு இன் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு வந்திருப்பார்,

இப்போது தேவியின் புன்னகை, பக்தனின் குதியாட்டதைப் பார்த்து மகிழ்ந்து, மேல்லிதான நாணத்துடன் , கண்கள் கர்வம் கொள்ள , தன் கர்வத்தையும் களிப்பையும் காட்டிக்கொள்ளாமல், வாய்க்குள் குமிழும் சிரிப்பு.

குமிழும் சிரிப்பு எண்டால் , வாய் நிறைய காற்றெடுத்து , அது தொண்டையை அடைக்கும் போது வெடித்து வெளிவரும்.

குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிண் சிரிப்பும் - உபயம் கை தட்டும் ராக்கம்மா
இந்த இரண்டுக் குமுண் சிரிப்புக்கும் வகையில் ஒன்றானாலும் வாகில் ஒன்றல்ல , புரிந்தார்க்குப் புரியும், காதல் தெரிந்தால் புரிவதற்கான நிகழ்தகவு அதிகம்.

ராஜா இதுக்கு என்ன மியூசிக் போடலாம் ?

இது தேவியின் சிரிப்பு, பாகத்துக்கு போட்ட மாதிரி போட முடியாது, வேற மாதிரி எண்டா....
ம்ம்ம்... அது என்ன சிரிப்பு ஆ.. குமிண்... குமிண்...

குமிண்  எண்டா .... எங்கயோ கேட்ட மாதிரி.... ஆ...
வளி குமிழி...
ஓகே...இந்த காத்து குமிழி தண்ணிக்கயிருந்து வெளி வந்து உடயிறமாதிரி மியூசிக் ...
குமுளுதல்...குமிழும் ஒலி...
காதுக்கு கேக்காத சத்தத்தை எப்படி காற்றோடு சேர்ப்பது...

ஒரு கோடிளுத்த மாதிரி ஒரே நோட்ல ஒரு கீயில் 
கீ வேணாம்..குழல்.. இல்லை வயலின்...ம்கும் ...நரம்பு வாத்தியத்த விட காற்று வாத்தியம் தான் வளிக்குமிழ் ஒலி தரும்...

குழலோட சலங்கை சலசலக்க குழல் உச்சம் தொட தாளம் மேளம் சேர்ந்து வெடிக்க ...
குமிண் சிரிப்பு செரியா வருமா ?

ம்கூம் ..இது மகிழ்ச்சி கொப்பளிக்கிற மாதிரி , ஆனா எங்களுக்கு வேற மாதிரி வேணும்...வாய்க்குள்ளேயே நமட்டு சிரிப்பு , அடி வயிற்றில் இருந்து ஒரு சந்தோசக் குமிழி மேலெழுந்து கட்டுக்குள் அடங்காது வாய்க்குள்ளேயே அதை யாருக்கும் தெரியாமல் உடைத்து... அகா மாட்டிக்கிட்டியா என்ற மாதிரி ஒரு அசட்டு கர்வம்...
சந்தோசம் + வெட்கம் + கர்வம் + இத்தியாதி + இத்தியாதி + ....

என்னைய்யா இது ஒரே பேஜர் சிரிப்பயிருக்கு....

ம்ம்ம்......... ஓகே இப்படி வெச்சுக்கொள்ளலாம் வெற்றிக் களி நடம்...

சுப்பர் அதே தான் ... ஆனா வெளியில் காட்டக் கூடாது.. அமுக்கமா....

சங்க நாதம் ஆனா ஜதி அலட்டாம மெதுவா நிதானமா...
ஒரு பக்குவமான வெற்றி களிப்பு நடனம்...

அப்டியே வச்சுக்கொள்ளலாம்....


பக்தனை ஆட் கொள்வதில் தேவிக்கு அத்தனை பிரியம்.நாடகம் ஒன்று அரங்கேற்றி தானே பரீட்சை வைத்து , அவன் வெல்ல வீணும் அன்று அவாப்பட்டு , வெல்லப்போகிறான் எனத் தெரிந்ததும் , மகிழ்ந்து , மெலிதான கர்வத்துடன் , பெரிதாகக் காட்டாமல்...திருவிளையாடல்...அபிராமி அபிராமி அபிராமி...

வெற்றிக்களி நடம் , சங்க நாதம், வெற்றிக் களி கொள்ள ஒரு நடம் ...
தோம் தத் தீம கிட ...
தோம் தத் தீம கிட ...

மீள ஒருதடவை இந்த இடத்துக்காக அந்தப்பாடலை பாருங்கோ ...
http://www.youtube.com/watch?v=JJEyj_QAN3k
பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க....
காத்திருந்த காட்சி இங்கு காணக்கிடைக்க....
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே!
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே!
                                                                                             - வாலி 
கடைசி ஓவர்ல ஒரு ரன் எடுக்க வேணும், இரண்டு விக்கட் இருக்கு , form ல இருக்கிர batsman...
எவளவு நிதானமா ஆடுவரோ அவளவு நிதானம்..வெற்றிதான் உறுதியாயிட்டுத்தே....

பார்த்து பார்த்து கண்கள் இரண்டும் பூத்தனவே ...நீ வருவாய் என...
அப்படி பூத்த கண்கள் உனைப் பார்த்த பின்பும் பூத்தே இருக்கின்றது...
தேடி தேடி பூத்திருந்தத கண்கள் ... சிவந்து காய்ந்திருந்த கண்கள் உனைக்கண்டதும் குளிர்ந்து உன் திவ்விய தரிசனத்தை அள்ளிப் பருக அகலத்திறந்து பூத்திருக்கின்றன ...இரண்டு பூத்தலுக்கும் வேறு பாடு உண்டு. காத்திருந்த காட்சி கண்ட பிறகும் ஏன் பூத்திருக்கு ....காத்திருந்த காட்சி இங்கு காணக்கிடைத்திருப்பதால்....

ஒரு நல்லா விளையாட்டு வீரனுக்கு அழகு என்ன ....
தான் தோற்கப் போகிறேன் எண்டு தெரிந்தாலும் பந்து வீச தயாராகும் எதிரணி வீரனிடம் மேற் சொன்ன வெற்றிக்கு தயாராகும் பட்மனுக்கு ஒரு பரிதாபம் வரவேணும்....
இந்த வெற்றி எனது மட்டுமல்ல உனக்கும்தான் இருவரும் சேர்ந்து ஒழுக்கமுற சிறப்பாக விளயடியதே வெற்றி எனும் எண்ணமே அழகு.... Jhonins always play the game

ஊன் உருக உயிர் உருக தேடின், தேன் தரும் தடாகம் அபிராமி ...
ஊனும் உயிரும் உருகுமாறு சுவை கொண்ட தேன் தரும் தடாகம் அபிராமி ...
(ஒரு வகை சிலேடை)

இந்த மதி வருக வழி நெடுக ஒளி நிறைக; எல்லோர் வாழ்விலும் மதி வருக வழி நெடுக ஒளி நிறைக....
(இங்கே பக்தன் தனக்கு வேண்டுகிறான ஊருக்கு வாழ்த்துகிறனா என்பது வாலிக்கே வெளிச்சம்)

இதுக்கு மேலே வயது வந்து, விளக்கமும் இருக்கிறவை மட்டும் முறையா ரசிக்கலாம்... மற்றவை வாசிக்கிறது அவை அவயிண்ட விருப்பம்...

இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை 
நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி வேதப் பரிபுரையே.
                                                                                                                  - அபிராமி அந்தாதி 42
முதலில் இந்தப் பாடலின் அர்த்தத்தை புரிந்து கொள்வோம்.....

இது ஒன்றும் சிக்கலான பாடல் அல்ல, அர்த்தம் நேரடியானது தான்....

பரிபுரையான தேவியின் அழகை அழகாக சொல்லும் பாடல்...

தேவியின் ஒவ்வொரு கொங்கையும் ...
இடம் கொண்டளவு விம்மி ...தனக்கிணையான மறு கொங்கையுடன் இறுகி.. (கொஞ்சம் பௌதிக அறிவுடன் கற்பனை செய்யுங்கள்..அருகருகே உள்ள இரு பலூன்களுக்கு காத்தூதும் போது வலதுள்ளது இரு புறமும் விம்மும் போது இடது புறம் மற்ற பலுனால் இறுக்கப்படும்...)
இப்போது இந்த தனங்களை எப்படி வாரி அள்ளிக்கட்டுவது ? முத்து மாலை கொண்டு தான்... அனால் ..தனங்கள் முத்தின் அழுத்தத்தை தாங்குமா ? அதனால் இளக்கி கட்டி...

அட ஆண்டவா இந்த வரிகளை எழுதியவன் பக்தனா.....

இப்படிப்பட்ட சிறப்பு பொருந்திய கொங்கைகள் சிவனை சும்மா விடுமா ?
இந்த மலை மார்பு அதன் மதர்ப்பு அந்த மலை மார்பனை, மலையான் மருகனை (முருகன் சிவன் இருவருமே மலையான் மருகர்களே... இங்கே சிவனை குறிக்கின்றது.. மலை மார்பன் என்பதுஇறைவன் வலிய நெஞ்சை (குறிக்கும்) ஆட்டுவிக்கின்றது...( நெஞ்சை நடம் கொண்ட நாயகி )

தேவி இறைவனை ஆட்டுவிக்கிறாள் என்றால் , அது நல்லெண்ணத் தோடன்றி , வழக்கமான விளக்கமல்ல... "கொள்கை நலம் கொண்ட நாயகி" ஆகையால் இந்த நாயகி சொல் படி ஆடுதல் இறைக்கு ஒன்றும் இழுக்கல்ல.

நல்லா பாம்பு படம் போன்ற அல்குல் உடையவளே....(இது இன்றைய சினிமா பாட்டில் என்றால் சென்சார்...) (மேலதிக விளக்கத்திற்கு ஒன்லைன் மதுரை தமிழகராதியில் அல்குல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்...) (பாம்பு படம் உவமை நயம் புரிகிறதா ? )

நண்பன் பாரதி சொன்ன பிறகுதான் அல்குலிற்க்கு இடை என்கிற அர்த்தம் பெரிதும் பொருந்தும் போலிருக்குறது. "பாம்பை அரையில் வடம் போல கட்டிய இடை" நன்றி நண்பா.....ஆனால் வடம் என்றால் நல்லபாம்பு படம் என்று நயம் சொன்னால் தப்பா .... அது ஒரு அழகிய உவமானம்.

பணிமொழி :- குளிர் வார்த்தைகள்
வேதப் பரிபுரை: வேதங்களே அவள் சிலம்பு...
(அபிராமி அந்தாதி முழுமையாக விளக்கத்துடன் இங்கே)

இனி குணா...

தேவியின் விழிகளை பார்த்த படி வழிப் போனவன் அவள் அருள் பிரசாதம் பெற காதிருக்கப்பணிக்கிறான்... அருகில் தேவி...முத்துமாலை அணிந்த தேவி....ஜேக ஜோதியென ஜொலிக்கும் தேவி (பாடலில் கதாநாயகியின் உடை அலங்காரத்தை காண்க இப்பாடலுக்கான பொருத்தம் புரியலாம்...) 

இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு

இந்த வரிகளுக்கான விளக்கம்; காட்சியே சாட்சி; பார்க்க


பாடலின் மீதி வரிகளுக்கான அர்த்தம் இடம் கொண்டு " பாடல் முடிந்த பின் வரும் interlude ல் காண்க
பக்தன் தேவியை சேர்வதை இசையும் நடமும் காட்சியும் சேர்ந்து பிரமிக்க வைக்கும்....

அதில் சிவலிங்க விளக்கமும் சேர்ந்து தரப்பட்டிருக்கும்...

அர்த்தநாரீஸ்வரர், சிவன் என்பதை காட்சி சாட்சி சொல்ல விளையும்..

இதை பற்றி மட்டும் தனியாக ஒரு பகுதியை எழுதலாம்.. அனால் இதுவரை தந்த முன்னுரையுடன் உங்கள் கற்பனைக்கு மீதியை விடுவதே சிறப்பென கருதுகிறேன்...

இந்த வாசிப்பு உங்களை மீள ஒரு தடவை குணா படம் பார்க்கவோ அல்லது அபிராமி அந்தாதி படிக்கவோ தூண்டினால் மகிழ்ச்சி.

-இ.த

வெள்ளி, அக்டோபர் 08, 2010

மாணிக்கவாசகர், ஆண்டாள் மற்றும் குணா





சைவ நாற் குரவர்
 சைவ சமயம் இறைவனை உணரும் வழிகளாக நான்கு பாதங்களைஅடையாளம் காட்டுகிறது.

  1. சரியை 
  2. கிரிகை 
  3. யோகம் 
  4. ஞானம் (சீதாவை தேடிய ஞானம் இல்லை ) 
இதில் ஞானம் என்பது தனி வகை. சாதாரணர்களோடு வாழும் அல்லது வாழப் பணிக்கப்பட்ட அசாதாரணர்களே இவ்வழி இறை உணர்ந்தவர்கள். உணர்ந்த வழி காதல்.... மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல..... அதயும் தாண்டி புனிதமானது!


மாணிக்கவாசாகர்

Bio-Data:

பிறப்பிடம்: வாதாவூர் (மதுரையில் இருந்து சுமார் ஏழு மைல்)
தொழில்: அமைச்சர்
                   பிரதான அமைச்சகம்
                   பாண்டிய அரசு
                   மதுரை.
மணிவாசகரின் காதல் தனித்துவமானது. (புரட்சிகரமானது எண்டும் சொல்லலாம், இல்லாட்டி கொஞ்சம் விவகாரமானது எண்டு சிலர் சொன்னாலும் ஆச்சரியமில்லை)

தன்னை தலைவியாக வரித்து , இறையை தலைவனாக நினைத்து கவிதை செய்த முதல் பெம்மான்.

அந்தக் காலத்திலேயே தன் கவிதை எழுத assistant வைத்த கவிஞ்ஞர்.
உதவியாளர் பெயர் சிற்றம்பலம்.
அவர் ஒரு பெரிய dancer. அம்பலத்தில் தான் perform பண்ணுறவர்.
அம்பலம் ஏன்டா சும்மா இல்லை அது golden stage.

எது எப்பிடியோ மணிக்கு தெரியாது தான் காதலிக்குறது சிற்றம்பலம் எண்டு. சிற்றம்பலம் மணி இன்ட கவிதைல ஒரு இது. அதான் மணிக்கு தெரியாம assist பண்ணினவர்.

தமிழ் காதல் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பாடல்களுக்க சொந்தக்காரர் மணிவாசகர்.

இறையை கை கால்கள் கொண்ட மனித உருவுக்குள் கற்பனை பண்ணி ஒரு உறவு வைத்து அழைத்து அதில் உணர்வு மிக வாழ்தல் ஒண்டும் தமிழுக்கு புதிதல்ல. அந்த உறவு காதலாகி கனிவது கொஞ்சம் rare தான்.

ஒரு ஆணே ஆணின் பேரழகில் மயங்கி , அந்த அளப்பெரும் சோதியி சேர்வதற்கு தனக்குள் இருக்கும் பெண்ணை தேடுவது கொஞ்சம் புதுமையே. அந்தக் காலத்தில் இது புதுமை, அதுவும் கவிதைக்கு இந்தக் காலத்தில் ......

சாம்பிள் மாணிக்கம்:

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155


start உம் end உம் இல்லா ஒரு rare light நம்ம அண்ணாச்சி அண்ணாத்தை பற்றி நங்கள்லாம் சும்மா speaker பூட்டு பெரும்ம்மாய் பேசோக்கை ,சும்மா சோக்கா blade கணக்கா கண்ணு இருக்க பொண்ணு நீயி இன்ன மட்டயயிடிய ?ஏன்மா காதுல ஈயத்த கரைச்சு ஊத்திடய்ங்கலா ?

சாதரணமா அண்ணாத்தை பேர தூரக்கா கூவினகா கூட feel pannuviye....இன்னைக்கு என்னாச்சும்மே ?நல்ல கீதே கதைஇன்னிக்கு இவ்ளோ நடந்தும் எதுவுமே நடக்காத கணக்கா silenta இருக்கியே ?

என்ன அண்ணாத்தை நினபில dreamz ஆ ? ? ?



(மணி மன்னிப்பாராக....)

ஆண்டாள் 

தமிழ் கவிதை உலகில் காதலை பெண் பதிவு செய்த தொன்மையான பாசுரங்கள் ஆண்டாள் நாச்சியாரது திருப்பாவை.

மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்!............ இது எல்லோருக்கும் தெரிந்த பாசுரம் எனினும்

பதினைந்தாவது பாசுரம் மேற் சொன்ன மணி வாசகர் பாடல் போல இருக்கும்...




எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?*
சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்*
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்*
வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக*
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை*
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்*
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை* மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.


பொருளை தேடி தெரிந்து கொள்க....எல்லாப் பொருளையும் தேடி தெரிவதே வாழ்க்கைக்கு நல்லது

குணா






பைத்தியம் என்பது சார்புத் தத்துவத்தை எடுத்துக்காட்டும் நல்ல உதாரணம்.

சாதாரணர்கள் (நாங்கள்) மத்தியில் பைத்தியத்தின் frame (of mind) அசாதாரணமானது ஆதலால் எங்களுக்கு அந்த அசாதாரணம் பயித்தியம். (புரியா விட்டால் பார்க்க படம் போராளி)

கால ஓடத்தில் பயித்தியங்கள் சில பரமார்த்த குருக்களாக அறியப்ப்பட்டதுண்டு. ஜனநாயக உலகம் தங்கள் frame (of mind) ஏ சரியானது / இயல்பானது என முடிவு கட்ட காரணம் அதே frame (of mind) ல் பெரும்பாலோனோர் இருப்பதே.

காலம் ஒவ்வொரு frame க்கும் கிடைக்கும் / குடுக்கும் அங்கீகாரத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது.

தாய் சொல் தட்டாத ஒரு குழந்தை. தனயன் வயது முப்பதுகளின் ஆரம்பத்தில். பெரும்பாலானோர் அவனை பயித்தியம் என்பர்.

ஏலவே குறிப்பிட்ட இருவரும் (மணி மற்றும் ஆண்டாள்) ஆரம்பத்தில் பயித்தியம் என்று தண்டனை வரை போனவர்கள்.

இதோ இவனும் காதலிக்கிறான்.....

இதுவரை புராணங்கள் பிராட்டியை சபித்து உலகனுப்பி ஈசனை காதலிக்க வைத்திருக்கிறது. ஆனால் முதன் முதல் பிராட்டியை ஒரு 'பிராந்தன்' காதலிக்கிறான் ....

அபிராமியை காதலிக்கிறான் இந்த குணா...

இந்த பயித்தியம் எனப்படும் பக்தன் ஒரு வினாதமான முரண்... பல சமயம் அசாதியமான தத்துவங்களை சாதாரனமான தர்கங்களில் வெளிப்படுத்தும் சில சமயம் மிக சுலபமாக ஏமாந்து போகும்.

அபிராமியின் வருகையை எப்படி இருக்கும் ?எப்படிக்க் கண்டு கொள்வது அந்த ஈஸ்வரியை ?கண்ணுக்குள் அடங்காத அந்தப் பேரெழிலை சொல்லுக்குள் அடக்குவது எப்படி ?

இப்படி கட்டியம் கூறுகிறான் ஒருத்தன்....

மங்கள இசை முழங்க... பிப்பிரிப்.... பிப்பிரிப்.... பீ ... எனமுத்து வடங்கொண்ட நங்கை தூய உருப் பளிங்கு போன்ற மங்கை அபிராமி வருவாள்.

அவள் வருகை ஆயிரம் கோடி சூரிய உதயம். ஏற்கனவே தன் குழை கொண்டு மதி தந்தவள்......(அபிராமிப்பட்டர்) இம்முறை ஆதவனின் அழுக்கு எடுப்பாள். பவர்ணமியில் சீறத் திருவுளம்....

இந்தப் பாடலுக்கானவர்கள் : இளையராஜா , கமல் காசன் , சந்தான பாரதி , வேணு, லெனின், ஜேசுதாஸ்.......

அபிராமி தரிசனம்:

கட்டியம் சொன்ன மாதிரி அபிராமி வருகிறாள்.இதோ அவனை கடந்து போகிறாள்...அசைந்து கடந்தது முத்து ரதம்.............

கடந்து போகிற காட்சிக்கு மனசுக்குள் மத்தாப்பு போடும் ராஜா...வீணையா, கீ-போர்டா தெரியாது....

திகைத்து நிக்கிறான் குணா... கடந்து சென்று விட்டாள் அபிராமி...நிலை குலைந்து சரிகிறான் பக்தன் .....கண்களில் விழுந்த காட்சி கண் மணிக்குள்ளேயே நிற்கிறது ...கண்மூடி மெல்ல அனுபவிக்கிறான் .....“என் அபிராமியா ? “ - தன்னை தானே கேட்டு கொள்கிறான் ....

அவன் முகத்தில் மந்தகாசம்.... அவளே தான்....உலகமே அவனை சுற்றி வருவது போல உணர்கிறான் ...

கண் விழித்துப் பார்த்தால் காணவில்லை.....துணுக்குற்று நிமிர்ந்து எழுந்து ஓடுகிறான் தேடுகிறான்....

கோயில் மணி அவனை ஆசிர்வதிதனுப்புகிறது...அபிராமி தன்னை தேடி வந்தாள் என்று இறுமாந்திரிந்தவனின் தலைக்கனத்தை குட்டி அனுப்புகிறது மணி...

ஓடுகிறான்...!

திசை மாறி திரும்பியவனை நிறுத்தி ...திரிபுர சுந்தரியி நோக்கி....திசை காட்டுகிறது கை காட்டி மரம்.

அவன் அஞ்ஞான இருள் நீங்கி பேரருள் ஒளி பிரகாசிக்கிறது...ஆதவனின் அழுக்கு எடுக்கிறாள் அபிராமி. (பார்க்கப் பாடல் - இது காட்சி அமைக்கப்பட்ட விதம் அழகு)

பகல் நேரத்து பௌர்ணமி அவள்.
வேதம் அவளின் பரிமாணங்களை சொல்ல விளைகிறது...பேசாப் பொருளை பேச விளைகிறது பாடல்.


நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச சாயகி
சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு வாய் அகி
மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று ஆய கியாதியுடையாள்
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் - அபிராமி அந்தாதி 50

நாயகி : ஈசனின் தலைவி அல்லது சக்தி
நான்முகி : நாலு முகம் கொண்டவள் / பிரம்ம சக்தி
நாராயணி : நாராயணனின் சக்தி
கைநளின பஞ்ச சாயகி : இந்த வகை மலர் அம்புகளை கைகளில் ஒய்யாரமாக வதிருப்பவளே
சாம்பவி : நெற்றி கண் உடையவள் அல்லது சம்பு (சிவன் ) இக்கு பிரியமானவள்
சங்கரி : சந்தோசத்தையும் இன்ன பிற பொருள் களையும் ஆக்குபவள்
சாமளை : எழில் உரு வானவள்
சாதி நச்சு வாய் அகி : நாக பாணி
மாலினி : மாலை போன்றவள்
வாராகி : உலகளந்தவள்
சூலினி : சூலம் தரித்தவள்
மாதங்கி : கரிய திருமேனி நிலவு நெற்றி கொண்டவள்
( just to remind MIA : மாதங்கி அருள்பிரகாசம்.)

என்று ஆய கியாதியுடையாள்: மேற் சொன்ன list உள்ளது போல பல வடிவானவளே ...

------------------

பட்டர் பாடும் போது

.... சரணம் அரண் நமக்கே என்பார் அவருக்கு அபிராமியின் பாதுகாப்பு அந்த தருணத்தில் அவசியப்பட்டது

இங்கே மூன்று முறை சரணம் என்பார்...குணா ஒரு எதிர்பார்ப்பு அற்ற பக்தன் ...directa சரண் அடைந்து விடுகிறான்------------------

அபிராமியின் பாதங்களில் குணாவின் இதயம் சரண் அடைவதை அழகாக காட்சிப் படுதியிருப்பதை காண்க.

தன் இதயம் சரண் புகுந்து கொண்டதை மூன்று முறை கூவிக் கொண்டாடுகிறான் இந்த பக்தன்

தேவியின் காவலன் அவனை ஒரு நிலைப்படுதுகிறான்...

சரணத்தின் நினைப்பில் திளைத்திருந்த வேளை குறிக்கிட்ட காவலன் செயல் ... மேலும் காத்திருக்க சொன்னது அவனுக்கு கோபம் வருகிறது உடனே மறந்தும் போகிறது...காரணம்....அபிராமி! ..... அபிராமி! .... அபிராமி .....!

நடன இயக்குனர்களுக்கு ஒரு சவால்;

ஜதி மிக இலகு. “தோம் ... தோம் தோம்.”முதல் தோம் ஒரு மாத்திரையில் ஒலிக்க மற்ற இரண்டும் சேர்ந்து அதே நேர அளவில் (ஒரு மாத்திரை) ஒலிக்கும் ...இடையில் ஒரு விநாடி மௌனம் ...

காட்சி:தேவியை கண்டு விட்ட பக்தன்....சாதாரண பக்தன் அல்ல.

அவன் frame of mind ஏ வேறு .சில நொடிகளில் பேரருள் பிரவாகம்...மனது குதிக்கிறது...

என்னளவில் இது இந்த பாடலில் முத்திரையான ஒரு இடம்...

இசையும் சலனமும் நடிப்பும் ஒருங்கே மனதில் பதியும்......

இந்தக் காட்சிக்காக பாடலை மீண்டும் பார்த்து ரசியுங்கள்....

இதோடு நின்றிருந்தால் இந்த கட்டுரை எழுத தோன்றியிருக்காது .....இனிமேதான் கதகளியே.....

அடுத்த பாகம் ->