ஒரு தென்றல்க் காற்று
அந்த மரத்தின் ஒவ்வொரு இலைகயையும்
திருப்பிப் பார்த்ததுக்கொண்டிருந்தது.
ஒரு புது கொப்பியின்
எல்லா வரிகளிலும்
முத்து முத்தாக
கவிதை எழுத முயன்று கொண்டிருந்தான்.
நீ என்ன வேணும் எண்டாலும் எழுதிக்கொள்
என்ற அர்ப்பணிப்பில்
கொப்பியின் ரசனை தெரிந்தது.
கைகள் முயல்கள்
தலை எலி
நெஞ்சு பட்டம்
இடுப்பு சமுத்திரம்
கால்கள் வேர்கள்.
முயல்கள்
அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன
பயமா? பசியா?
எலி
திடீரெண்டு மறைவதுவும் பின் எழுவதுவும்
நிற்காமல் அலைந்துகொண்டிருந்தது.
சமுத்திரத்தில்
பௌர்ணமிகாலத்து அலை.
வேர்கள்
ஆழ ஊடுருவி
இறுகப் பற்றிக் கொண்டிருந்தன.
பட்டம்
சாய்வாகவும் குத்தாகவும்
காற்றின் போக்கில் பறந்து கொண்டிருந்தது.
தவறுகளும் செரி
தண்டனைகளும் செரி
அத்தனை இனிப்பு.
அறுபத்தி மூன்று கலைகளும்
ஒன்று சேர்ந்தது என்பதால்தான்,
பேரின்பம் கூட இதன் மீது பயம் கொள்கிறது.
சரணாகதியும் ஆட்கொள்ளலும்,
சரியை மார்க்கம்,
கிரியை மார்க்கம்,
யோக மார்க்கம்,
ஞான மார்க்கம்,
எல்லா மார்க்கத்தின் வழியும்
அததற்க்கான முக்திகளும்.
இதுவும் பேரின்பம் தான்.
ஆனால்
கடவுள் வேறு
பக்தன் வேறல்ல.
உலகில்
அதிகம் காமிக்கப் பட்டதும்
அதிகம் காமிக்கப் படாததும் – இதுதான்.
காமத்தின் பால்ப் பட்டு
அவர்கள் செய்ததெல்லாம்
காமத்துப்பாலிலும் சொல்லாதது.
முந்தய பாகம்

