ஞாயிறு, மே 10, 2015

காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி…

காதலாகி…

கண்டனன்.
கனலாக உருகி மனம் கன்னினன்!
கொண்டனன்
முன்னும் பின்னும் மனைமாட ஒரு குழப்பம்!
ஈர்த்தனள்
இன்னது என்று சொல்லொணா இயல்பினால்
உணர்ந்தனன்
தன் வயதின் வினாவுக்கு ஒரு விடை
காதல் – ஆகி!

கசிந்து…

சிரித்தனர்
முன்னும் பின்னுமாய் நண்பர்கள்
பேசினர்
சிலேடை, சின்னதாய் கவ்வ வெட்கம்
பார்த்தனர்
அங்கும் இங்குமாய் என்று ஊர் சொல்ல
மறை(ந்)த்தனர்
தலை, மறுக்காமல் மனது மெல்ல நகை கொள்ள
கசிந்தது – சேதி!

கண்ணீர் மல்கி…

கொண்டனர் - உரு
குலச் சாதி சனம்
விண்டனர்
தங்கள் விருப்பதற்கு - ஒரு வன்மத்தை
மாய்த்த்தனர்
இருவரும் இது பொறுக்காது
வருந்தினர்
பொய் மானத்தால் கொண்ட இழப்பை எண்ணி
கண்ணீர் மல்கி….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக